ஆன்மிகம்
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஐராவதேசுவரர் கோவிலில் வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஐராவதேசுவரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் ஐராவதேசுவரர், பாரிஜாதவனேசுவரர், பிரம்மபுரேசுவரர், இந்திராபுரீசுவரர், புஷ்பபுரீசுவரர், ஐராவதபுரீசுவரர் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அர்த்த மண்டபத்தின் அடுத்துள்ள கருவறையில் இறைவன் ஐராவதேசுவரர் லிங்கத்திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம். ஆலயத்தின் தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம்.
ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று இறைவிக்கு வளையல் அலங்காரம் நடைபெறும். பின் அந்த வளையல்கள் பெண்களுக்கு விநியோகம் செய்கின்றனர். அன்று அம்மன் வயிற்றில் முளைப்பாரி கட்டி அதை குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு பிரசாதமாகத் தருவர். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள். மேலும் இறைவியின் சந்நதியின் முன் தொட்டில் கட்டி குழந்தைக்காக பெண்கள் வேண்டிக்கொள்கின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நேமம் என்ற இந்த தலம். சாலையின் ஓரத்திலேயே உள்ளது
ஆலயம்.
ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று இறைவிக்கு வளையல் அலங்காரம் நடைபெறும். பின் அந்த வளையல்கள் பெண்களுக்கு விநியோகம் செய்கின்றனர். அன்று அம்மன் வயிற்றில் முளைப்பாரி கட்டி அதை குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு பிரசாதமாகத் தருவர். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள். மேலும் இறைவியின் சந்நதியின் முன் தொட்டில் கட்டி குழந்தைக்காக பெண்கள் வேண்டிக்கொள்கின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நேமம் என்ற இந்த தலம். சாலையின் ஓரத்திலேயே உள்ளது
ஆலயம்.