வைகாசி வளர்பிறை சஷ்டி தினமான இன்று விரதம் இருந்து முருகப் பெருமானின் அருளை பெற நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
அன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும்.
பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.
இந்தப் வைகாசி வளர்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக்கு பணியிடங்களில் தொழில் வியாபாரங்களில் இருந்து வரை நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக வேலை தேடி அடைந்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். திருமணம் ஆகாமல் காலதாமதமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் ஏழ்மை நிலை அறவே நீங்கும்.