ஆன்மிகம்

புனித சவேரியார் ஆலய சப்பர பவனி

Published On 2019-06-03 03:37 GMT   |   Update On 2019-06-03 03:37 GMT
புள்ளம்பாடி ஒன்றியம் புதூர்பாளையம் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயத்தில் நவநாள் திருப்பலியும், வேண்டுதல் சப்பர பவனியும் நடைபெற்றது.
புள்ளம்பாடி ஒன்றியம் புதூர்பாளையம் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து தினமும் மாலையில் நவநாள் திருப்பலியும், வேண்டுதல் சப்பர பவனியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு மாதா, சவேரியார், சம்மனசுமேரி சொரூபங்கள் தாங்கிய ஆடம்பர சப்பர பவனி நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

முன்னதாக விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவில் இன்னிசை கச்சேரியும், வாணவேடிக்கைகளும் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை தங்கசாமி மற்றும் சவேரியார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். 
Tags:    

Similar News