ஆன்மிகம்

பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு

Published On 2019-05-10 04:41 GMT   |   Update On 2019-05-10 04:41 GMT
பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாட்டை நீர்முளை புனித பிரான்சிஸ் சேவியர் ஆலய பங்கு தந்தை ஞானதுரை தலைமை தாங்கி நடத்தினார். இதில் சிறப்பு திருப்பலி நடந்தது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் மாதந்தோறும் புதுமை இரவு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்துக்கான புதுமை இரவு வழிபாடு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

புதுமை இரவு வழிபாட்டை நீர்முளை புனித பிரான்சிஸ் சேவியர் ஆலய பங்கு தந்தை ஞானதுரை தலைமை தாங்கி நடத்தினார். இதில் சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் தேர்பவனி நடைபெற்றது. அப்போது கிறிஸ்தவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மாதாவை பிரார்த்தனை செய்தனர்.

நிகழ்ச்சியில் பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News