ஆன்மிகம்

பாண்டுப்பில் அந்தோணியார் ஆலய ஆண்டு விழா நாளை தொடங்குகிறது

Published On 2019-04-22 04:02 GMT   |   Update On 2019-04-22 04:02 GMT
மும்பை பாண்டுப் மேற்கு டெம்பிபாடாவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 60-வது ஆண்டு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
மும்பை பாண்டுப் மேற்கு டெம்பிபாடாவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 60-வது ஆண்டு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. 28-ந் தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. அடுத்த மாதம் 3-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நற்கருணை ஆடம்பர பவனியும், 4-ந் தேதி மாலை 6 மணியளவில் தேர் பவனியும் நடக்கிறது. ஆண்டு விழா பெருவிழா 5-ந் தேதி நடக்கிறது.

விழாவையொட்டி நடைபெறும் சிறப்பு திருப்பலிகளை மேதகு ஆயர் தேர்மனிக் சாவியோ பெர்னாண்டஸ், பீட்டா் ஜெயகாந்தன், பீட்டர் ரெமிஜியுஸ் ஆகியோர் நிறைவேற்றுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அருட்தந்தையர் செபாஸ்டின், தனம், அருட்சகோதரர் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News