ஸ்ரீதுர்க்காதேவிக்கு விரதம் இருந்து செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.
இந்த நேரம் பரிகாரங்கள் செய்ய மிகவும் உகந்த நேரமும், மிகவும் பலன் தரக்கூடியதும் ஆகும். இந்த நேரத்தில் பூஜைகள், பரிகாரங்கள் செய்வதால் தோஷங்கள் நீங்கி குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும்.
சுக்கிரவார(வெள்ளிக்கிழமை) ராகுகால பூஜை
மங்களவார (செவ்வாய்க்கிழமை) பூஜை
ஸ்ரீதுர்க்காதேவி விரதம் இருந்து சந்நதியில் அல்லது வீட்டில் செவ்வாய்க்கிழமை 4.00 - 4.30 மணியிலான அமிர்தகடிகை நேரத்தில் எலுமிச்சை சாதம், எலுமிச்சைபழ மாலை, நற்சீரக பானகம் வைத்து வணங்கி 9 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தட்சணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.
துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப் பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை ராகுகாலம் பத்திரகாளி அவதரித்த வேளையாதலால் விரதம் இருந்து அந்த நேரத்தில் காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.
கேது திசை போக்கும் விநாயகர்
கேது புத்தி மற்றும் கேது திசை நடைபெறுபவர்கள் தினமும் விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் கேதுவால் ஏற்படும் துன்பங்கள் குறையும்.