ஆன்மிகம்

இட்டமொழி தூய யோவான் ஆலய விழா

Published On 2019-05-17 03:47 GMT   |   Update On 2019-05-17 03:47 GMT
இட்டமொழி அருகே உள்ள சுவிசேஷபுரம் தூய யோவான் ஆலயத்தில் சேர்ப்பின் பண்டிகை கடந்த 4 நாட்கள் நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
இட்டமொழி அருகே உள்ள சுவிசேஷபுரம் தூய யோவான் ஆலயத்தில் சேர்ப்பின் பண்டிகை கடந்த 4 நாட்கள் நடந்தது. முதல் நாள் மாலையில் ஆயத்த ஆராதனை, நற்செய்தி கூட்டம் நடந்தது. 2-ம் நாள் அதிகாலையில் அதிசயபுரம் சேகர குரு ஜெசு விக்டர் தேவசெய்தி வழங்கினார். காலையில் வேதாகம தேர்வு, பெண்கள் பண்டிகை, இந்திய மிஷனரி சங்க ஊழிய பகிர்வு ஆராதனை நடந்தது.

3-ம் நாள் அதிகாலையில் அருணோதய பிரார்த்தனை, காலையில் பரிசுத்த ஞானஸ்நான ஆராதனை நடந்தது. மதியம் வருடாந்திர கூட்டம், மாலையில் விளையாட்டு போட்டிகள், இரவில் பஜனை பிரசங்கம் நடந்தது. 4-ம் நாள் காலையில் பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடந்தது.

டோனாவூர் சேகர குரு வசந்தகுமார் தேவசெய்தி வழங்கினார். இரவில் சபைமன்ற அளவிலான கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சேகர குரு பாஸ்கர் கனகராஜ் தலைமையில், சபை மக்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News