ஆன்மிகம்

ஆலம்பாக்கம் தோமையார் ஆலய தேரோட்டம்

Published On 2019-05-09 04:04 GMT   |   Update On 2019-05-09 04:04 GMT
திருச்சி மாவட்டம் புனித தோமையார் ஆலய திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து புனித தோமையார் சொரூபம் தாங்கிய தேரோட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், ஆலம்பாக்கம் கிராமத்தில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனியும், நேற்று காலை 8 மணியளவில் திருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு கிராம மக்களின் சார்பில் புனித தோமையார் சொரூபம் தாங்கிய தேரோட்டம் நடைபெற்றது.

இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாலை 6.30 மணியளவில் திவ்விய நற்கருணை ஆசீர் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அருட்தந்தை தொன்போஸ்கோ மற்றும் இறைமக்கள், தோமையார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News