ஆன்மிகம்

பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி

Published On 2019-04-22 03:56 GMT   |   Update On 2019-04-22 03:56 GMT
பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டரை முன்னிட்டு தவக்கால நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. இதில் நாள்தோறும் சிறப்பு திருப்பலிகள், ஏசுவின் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் விழாவாக ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டரை முன்னிட்டு தவக்கால நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.

இதில் நாள்தோறும் சிறப்பு திருப்பலிகள், ஏசுவின் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. தவக்காலத்தின் நிறைவாக நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஏசு உயிர்த்தெழும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஏசு உயிர்த்தெழுந்தார் என்பதை அறிவிக்கும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி, ஒளி வழிபாடு நடந்தது.

அதைத்தொடர்ந்து ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது. பேராலயத்தின் எதிரில் அமைந்துள்ள கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பலியில் கலந்து கொண்டவர்கள் மெழுகு வர்த்தியை ஏந்தி பிரார்த்தனை செய்தனர். நேற்று காலையிலும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன. இதேபோல் பூதலூர், கோட்டரப்பட்டி, மைக்கேல்பட்டி, மணத்திடல், மேகளத்தூர், முத்தாண்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் தின திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News