ஆன்மிகம்
சங்கரன்கோவிலில் புனித சூசையப்பர் ஆலயத்தில் தவக்கால நடைபயணம்
சங்கரன்கோவில் புனித சூசையப்பர் ஆலயத்திலிருந்து கிளைப்பங்கு சம்சிகாபுரம் புனித லொயெலா இஞ்ஞாசியார் ஆலயத்திற்கு தவக்கால நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
கிறிஸ்தவர்களின் 40 நாள்கள் தவக்காலம் கடந்த 6-ந் தேதி துவங்கியது. அன்று சாம்பல் புதன் என அழைக்கப்படுகிறது. இந்த 40 நாள் தவக்காலத்தின் பயனை விளக்கும் வகையில் அனைத்து ஆலயங்களிலும் புனித நடைபயணம் செய்து வருகின்றனர். சங்கரன்கோவில் புனித சூசையப்பர் ஆலயத்திலிருந்து கிளைப்பங்கு சம்சிகாபுரம் புனித லொயெலா இஞ்ஞாசியார் ஆலயத்திற்கு தவக்கால நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் சங்கரன்கோவில் வட்டார அதிபர் மற்றும் பங்குத்தந்தை சாக்கோவர்கீஸ் தலைமையில் இரு ஆலயங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
தவக்கால நடைபயணம் சம்சிகாபுரம் கிளை பங்கில் நிறைவு பெற்றது. பின்னர் தொடர்ந்து சிலுவைப்பாதை திருப்பலி நடைபெற்றது. ஏற்பாடுகளை சம்சிகாபுரம் கிளை இறைமக்கள் செய்திருந்தனர்.
இதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் சங்கரன்கோவில் வட்டார அதிபர் மற்றும் பங்குத்தந்தை சாக்கோவர்கீஸ் தலைமையில் இரு ஆலயங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
தவக்கால நடைபயணம் சம்சிகாபுரம் கிளை பங்கில் நிறைவு பெற்றது. பின்னர் தொடர்ந்து சிலுவைப்பாதை திருப்பலி நடைபெற்றது. ஏற்பாடுகளை சம்சிகாபுரம் கிளை இறைமக்கள் செய்திருந்தனர்.