ஆன்மிகம்

அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா நாளை தொடக்கம்

Published On 2018-09-06 09:14 GMT   |   Update On 2018-09-06 09:14 GMT
புதுவை அரியாங்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் 328-ம் ஆண்டு பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
புதுவை அரியாங்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் 328-ம் ஆண்டு பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சென்னை மயிலைமறை வட்ட முதன்மை குரு ஸ்டேன்லி செபாஸ்டின் நாளை காலை 6 மணி திருப்பலிக்கு பின் கொடியை ஏற்றி வைத்து பெருவிழாவை தொடங்கி வைக்கிறார். அன்று மாலை 5.30 மணிக்கு தேர் பவனி, நற்கருணை ஆசீர் இடம் பெறுகின்றன. ஆரோக்கிய அன்னை பிறந்த நாளான 8-ந் தேதி மாலை வீதிகளில் சிறப்பு தேர் பவனி நடை பெறுகிறது.

அதைத்தொடர்ந்து நவநாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு திருப்பலி, மறையுரை, சிறிய தேர்பவனி, தேவ நற்கருணை ஆசீர் ஆகியவை இடம்பெறுகின்றன. அருட் தந்தையர்கள் அந்தோணி ராஜ், அமல்ராஜ், பெரிய நாயகசாமி, அந்தோணிசாமி, மார்ட்டின் டிகுருஸ், ஜான் பிரிட்டோ, விக்டர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றி சிறப்பு மறையுரை வழங்கு கின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ் வான ஆண்டு பெருவிழா வருகிற 16-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5 மணிக்கும், 6.15 மணிக்கும் திருப்பலிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து 8 மணிக்கு புதுவை- கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறு கிறது.

மதியம் 11.30-க்கு சிறப்பு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு திருப்பலி, அதனைத்தொடர்ந்து ஆடம்பர தேர் பவனியும் நடைபெறுகிறது. மறுநாள் (17-ந்தேதி) காலை 6 மணி திருப்பலிக்குப்பின் கொடி இறக்கம் செய்யப்பட்டு பெருவிழா நிறைவு பெறு கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை தாமஸ் தலைமையில் பங்கு நிர்வாக குழுவினர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News