சினிமா

சந்தோஷத்தில் கலவரம்

Published On 2018-11-01 08:07 GMT   |   Update On 2018-11-01 08:35 GMT
கிராந்தி பிரசாத் இயக்கத்தில் நிராந்த் - ருத்ரா ஆரா நடிப்பில் உருவாகி இருக்கும் `சந்தோஷத்தில் கலவரம்' படத்தின் முன்னோட்டம். #SanthoshathilKalavaram #Niranth #RudraAura
ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் திம்மா ரெட்டி.வி.சி. தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சந்தோஷத்தில் கலவரம்'.

நிரந்த், ருத்ரா ஆரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி.கல்யாண், கெளதமி, செளஜன்யா, ஷிவானி, அபேக்ஷா என இப்படத்தில் புதுமுகங்கள் பலரும், ராவி மரியா வித்தியாசமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - ஹரிசன் லோகன் ஹோவஸ், பவுலியஸ் கொன்டிஜிவாஸ், ஷிரவன் குமார், இசை - சிவநாக், பாடல்கள் - கபிலன், மணி அமுதன், ப்ரியன், படத்தொகுப்பு - கிராந்தி குமார், ஒலிப்பதிவு - அருண் வர்மா, தயாரிப்பு - ஸ்ரீ குரு சினிமாஸ், எழுத்து இயக்கம் - கிராந்தி பிரசாத்.



படம் பற்றிய இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசியதாவது,

ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதே கதை. அதனால்தான் `தீமைக்கும் நன்மைக்கும்' இடையில் நடக்கும் மோதல் என்று டைட்டிலுடன் டேக் லைன் போட்டுள்ளோம். இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றார்.

படம் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #SanthoshathilKalavaram #Niranth #RudraAura

Tags:    

Similar News