சினிமா

ஆருத்ரா

Published On 2018-08-30 14:26 GMT   |   Update On 2018-08-30 14:26 GMT
பா.விஜய் தாநாயகனாக நடித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் ‘ஆருத்ரா’ படத்தின் முன்னோட்டம். #Aaruthra
வில் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் படம் ‘ஆருத்ரா’. இதில் கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். மும்பை மாடல் அழகி திஷிதா, கொல்கத்தாவை சேர்ந்த மோகல், ஐதராபாத்தை சேர்ந்த சோனி ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். ஒளிப்பதிவு- பி.எல். சஞ்சய், இசை- வித்யாசாகர், எடிட்டிங்- ஷான் லோகேஷ், கலை-ராம்பிரசாத், ஸ்டண்ட்-கணேஷ், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்- பா.விஜய்.

படம் பற்றி அவரிடம் கேட்ட போது....

‘‘ஸ்ட்ராபெரி’ படத்தை தொடர்ந்து எனது இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஆருத்ரா’. நான், தொன்மையான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவன ஊழியராக இதில் நடித்திருக்கிறேன். எனது தந்தையாக எஸ்.ஏ. சந்திர சேகரன் நடிக்கிறார். கே.பாக்யராஜும், மொட்டை ராஜேந்திரனும் துப்பறியும் நிபுணர்களாக நடித்திருக்கிறார்கள்.

இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க வேண்டும்? என்ற முக்கிய செய்தியை சொல்லி இருக்கிறோம்.

‘ஆருத்ரா’ திரைப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாக இருக்கிறது.
Tags:    

Similar News