சினிமா

மும்பையில் குடியேறும் கீர்த்தி சுரேஷ்

Published On 2019-05-28 09:05 GMT   |   Update On 2019-05-28 09:05 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகி இருக்கும் கீர்த்தி சுரேஷ், தமிழ் படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாத நிலையில், மும்பையில் குடியேற இருப்பதாக கூறப்படுகிறது.
இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானாலும் ரஜினி முருகன் படம் மூலம் தான் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையானார். தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்தார். யாரும் எதிர்பாராத வகையில் இந்த படத்துக்கும் கீர்த்தியின் நடிப்புக்கும் நாடு முழுக்க வரவேற்பு கிடைத்தது. 

இந்த வரவேற்பால் திக்குமுக்காடி போன கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தை தேர்வு செய்ய காலம் எடுத்துக்கொண்டார். தற்போது இந்தியில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பாலிவுட் படங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.



இதற்காக மும்பையில் ஒரு வீடு வாங்கியுள்ளார். அங்கு விரைவில் குடியேற இருப்பதாக தகவல் வருகிறது.

Tags:    

Similar News