சினிமா

படப்பிடிப்பில் காயம் அடைந்த இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம்

Published On 2019-05-26 06:42 GMT   |   Update On 2019-05-26 06:42 GMT
பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம், பாகல்பன்தி படப்பிடிப்பின் போது இடது கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வருகிறார்.
பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் “பாகல்பன்தி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அனிஸ் பாஸ்மி இயக்குகிறார். நடிகர்கள் அனில் கபூர், அர்சத் வார்சி, நடிகை இலியானா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். 

சமீபத்தில் இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. அப்போது ஜான் ஆபிரகாமுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.



இதனால் படப்பிடிப்பு சில நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவலை படக்குழுவினரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News