சினிமா

கொரில்லா படத்தில் விருப்பமில்லாமல் ஒரு வசனம் பேசி இருக்கிறேன் - ராதாரவி

Published On 2019-05-25 07:37 GMT   |   Update On 2019-05-25 07:37 GMT
டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் `கொரில்லா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி, இந்த படத்தில் விருப்பமில்லாமல் ஒரு வசனம் பேசியிருப்பதாக கூறினார்.
ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கொரில்லா'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

விழாவில் நடிகர் ராதாரவி பேசியதாவது,

"என்னை அன்பாக அழைத்த இயக்குநர் சாண்டி அவர்களுக்கும், கதாநாயகன் ஜீவா அவர்களுக்கும் நன்றி. அவர் அப்பா கொடுத்த பணத்தில் தான் நாங்கள் வாழ்ந்திருக்கோம். ஜீவாவிற்கு யாரும் காம்படிஷனே கிடையாது. அது அவரது பெரிய பலம். அவர் அற்புதமான நடிகர். அவரை முதல் படத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். 



மனிதர்களை வைத்தே படமெடுப்பது பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். நான் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. எனக்கும் ஒரு நல்ல வேடம் தந்திருக்கிறார்கள். படத்தில் ஒரு வசனம் எனக்குப் பிடிக்காமல் பேசி இருக்கிறேன். யோகிபாபு நெகட்டிவ் விசயங்களை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ளும் நடிகர். 

இந்தப்படத்தில் அவரையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள். தயவுசெய்து தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்தப்படத்தை ஆதரிக்க வேண்டும்" என்றார்.

ராதாரவி பேசிய வீடியோ:

Tags:    

Similar News