சினிமா

செல்லகுஞ்சி பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுத்த ராகவா லாரன்ஸ்

Published On 2019-05-19 06:28 GMT   |   Update On 2019-05-19 06:28 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்டு கரிசைக்காடு கிராமத்தில் வாழ்ந்து வரும் செல்லகுஞ்சி பாட்டிக்கு ராகவா லாரன்ஸ் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்.
கஜா புயலால் பலர் தங்களுடைய வீடுகளை இழந்தார்கள். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு தன் சார்பாக வீடுகள் கட்டித்தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அறிவித்தது போலவே அந்தப்பணிகளைச் சரியாகச் செய்தும் வருகிறார். முதல் வீடு சமூக சேவகர் ஆலங்குடி கணேஷன் என்பவர்க்கு வீடு கட்டிக் கொடுத்து சென்றவாரம் கிரகப்பிரவேஷம் நடைபெற்றது. 

தற்போது  வீடு இழந்து பெரும் துயரை கண்ட தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள கரிசைக்காடு கிராமத்தில் வாழ்ந்துவரும் செல்லகுஞ்சி  பாட்டிக்கும் வீடு கட்டிக் கொடுத்து பாட்டிக்கு தண்ணீர் கொடுத்த சோகத்தை ஆனந்தக் கண்ணீரால் ஆற்றிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.



அன்று பாட்டி வீடு இழந்ததும் உலக அளவில் பாட்டியின் நிலைமை பேசப்பட்டது. பல நல்ல உள்ளங்களின் அனுதாபமும், அக்கறையும் லாரன்ஸ் மூலமாக இன்று  நிறைவேறியுள்ளது. இன்னும் இந்த மக்கள் பணிகள் தொடரும் என்று கூறுகிறார் ராகவா லாரன்ஸ்.
Tags:    

Similar News