சினிமா

உஸ்பெகிஸ்தான் செல்லும் திரிஷா

Published On 2019-05-17 16:06 GMT   |   Update On 2019-05-17 16:06 GMT
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு செல்ல இருக்கிறார்.
திரிஷா நடித்த சதுரங்க வேட்டை 2, கர்ஜனை என்ற இரண்டு படங்களும் ரிலீசுக்காகக் காத்திருக்கின்றன. மேலும் 1818, பரமபதம் என கைவசம் உள்ள படங்கள் வெவ்வேறு தயாரிப்பு நிலைகளில் இருக்கின்றன.

இந்த நிலையில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் திரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாசின் கதை, வசனத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தில் திரிஷா தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 



கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இதற்காக உஸ்பெகிஸ்தான் செல்ல இருக்கிறார் திரிஷா.
Tags:    

Similar News