சினிமா

மீண்டும் ரஜினிக்கு குரல் கொடுக்கும் பிரபல பாடகர்

Published On 2019-05-17 11:13 GMT   |   Update On 2019-05-17 11:13 GMT
பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினிக்கு பிரபல பாடகர் குரல் கொடுக்க இருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முதன்முறையாக ரஜினிகாந்துடன் இணைந்துள்ளார்.

மும்பையில் நடைபெற்று வந்த இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவு அடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. பிரதிக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் என தர்பார் படத்தில் தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் மற்ற திரையுலகில் இருந்தும் நடிகர், நடிகைகள் படக்குழுவில் இணைந்து வருகின்றனர்.



இந்நிலையில் தர்பார் படத்தின் ரஜினி அறிமுக பாடலை அவரது ஆஸ்தான பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட இருப்பதாக தகவல் வருகின்றன. பேட்ட படத்திலும் ரஜினி அறிமுக பாடலான மரண மாஸ் பாடலை அவர்தான் பாடினார்.
Tags:    

Similar News