சினிமா

தாயாரை பாட வைத்து அழகு பார்த்த ராகவா லாரன்ஸ்

Published On 2019-05-12 12:37 GMT   |   Update On 2019-05-12 12:37 GMT
தாய் என்ற அமைப்பை துவங்கியிருக்கும் ராகவா லாரன்ஸ், அதற்கான விழாவில் அவரது தாயாரை பாட வைத்து அழகு பார்த்திருக்கிறார்.
நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சில வருடங்களுக்கு முன் தன் தாயின் நினைவாக அவரின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் கட்டினார். தற்போது தாய் என்கிற அமைப்பைத் துவங்கியுள்ளார்.

தங்கள் பெற்றோர்களை யாரும் விட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இனி எந்த ஒரு தாய் தந்தையும் முதியோர் இல்லத்திற்குச் சென்று விட கூடாது என்பதற்காக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். 



அன்னையர் தினத்தை முன்னிட்டு இப்பாடலை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ். இவ்விழாவில் அவரது தாயாரை பாட வைத்து அழகு பார்த்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். மேலும் அடுத்த படத்தில் பாட வாய்ப்பு தருவதாகவும் கூறியிருக்கிறார் லாரன்ஸ்.


Tags:    

Similar News