சினிமா
சுட்டுப்பிடிக்க உத்தரவு படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன், நடிகர் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #SuttuPidikkaUtharavu
இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.
இந்த படத்தின் 80% படப்பிடிப்பு சண்டைக்கலைஞர்களை வைத்து படம் பிடித்திருக்கிறார்கள். இந்த படம் ஒரு மிகச்சிறந்த ஆக்ஷன் படமாக இருக்கும் என படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.
'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராம் பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்கி இருக்கிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் இந்த படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.