சினிமா
கவுதம் கார்த்திக்குடன் தேவராட்டம் படத்தில் நடித்துள்ள மஞ்சிமா மோகன், நான் ரொம்ப பாவம் என்று கூறியிருக்கிறார். #Devarattam #ManjimaMohan
அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இப்படத்தை தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது கவுதம் கார்த்திக்கு ஜோடியாக ‘தேவராட்டம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 1ம் தேதி வெளியாக இருக்கிறது.
மாலைமலருக்கு கவுதம் கார்த்திக் அளித்த பேட்டியில், மஞ்சிமா மோகன் மிகவும் திறமையானவர், தனக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்கு ஆழமாக விவரிப்பார். நான் எதாவது கேள்வி கேட்டு அதை விட்டுவிடுவேன். ஆனால், மஞ்சிமா அதைப்பற்றி விவரித்துக் கொண்டே இருப்பார். இதைப் பார்த்த பாபா மாஸ்டர், என்னப்பா அந்த பெண்ணை பேச வைத்துக் கொண்டே இருக்கிறாய் என்று கேட்டார். அதற்கும் மஞ்சிமா ஒரு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார். இப்படி படப்பிடிப்பு தளத்தில் நடந்தது என்று கூறினார்.
இதற்கு மஞ்சிமா, நான் என்னுடைய கண்ணோட்டத்தில் இருப்பதை மற்றவர்களுக்கு விவரிப்பேன். அதற்காக கொஞ்சம் பேசுவேன். இதை கவுதம் இப்படி கூறுகிறார். நான் படப்பிடிப்பு தளத்தில் பாவமாக இருப்பேன்.
இதற்கு கவுதம் கார்த்திக், மஞ்சிமாவை நம்பாதிங்க, நான்தான் பாவம் என்று கலகலப்பாக கூறினார்.