சினிமா

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராகவா லாரன்ஸ்

Published On 2019-04-26 12:58 GMT   |   Update On 2019-04-26 12:58 GMT
மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். #Lawrence #RaghavaLawrence
காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள். என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள்.

என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப்பட்டேன். அப்படி எதுவும் செய்யாதீர்கள். பொறுமையை கடை பிடியுங்கள். 



நான் மும்பையில் காஞ்சனா இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம். அது வரை அமைதி காப்போம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News