சினிமா

மாற்றம் வரும் என காத்திருக்கிறேன் - மதுரையில் நடிகர் விஜய் சேதுபதி பேட்டி

Published On 2019-04-25 07:15 GMT   |   Update On 2019-04-25 07:15 GMT
நல்லது நடந்தே தீரும் என்ற நம்பிக்கையில் நானும் உங்களைப்போல வாக்களித்திருக்கிறேன், மாற்றம் மிக அவசியமானது என்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த விஜய் சேதுபதி கூறினார். #VijaySethupathi
மாற்றம் வரும் என காத்திருக்கிறேன் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.

மதுரையில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நீண்ட நாட்களுக்கு பின்னர் மதுரைக்கு வந்திருக்கிறேன். மதுரை மக்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என்று நடிகர்கள் கூறுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் அதை விரும்பவில்லையே?

பதில்: நான் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்துள்ளேன். இது போன்ற கேள்வி வேண்டாமே.



கேள்வி: தமிழக அரசியலில் மாற்றம் வருமா?

பதில்: நல்லது நடந்தே தீரும் என்ற நம்பிக்கையில் நானும் உங்களைப்போல வாக்களித்து விட்டு காத்திருக்கிறேன். எப்போதும் மாற்றம் வேண்டும். இது மிகவும் அவசியமானது.

மேற்கண்டவாறு அவர் கூறினார். #VijaySethupathi

Tags:    

Similar News