சினிமா

ஜோதிகா படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சூர்யா

Published On 2019-04-22 08:37 GMT   |   Update On 2019-04-22 08:37 GMT
கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா - ரேவதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடைசி நாளில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார். #Jyothika #Revathi
ஜோதிகாவின் அடுத்தடுத்த படங்களை எஸ்.ராஜ் மற்றும் கல்யாண் இயக்கியுள்ளனர். ஜித்து ஜோசப் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதில் கல்யாண் இயக்கத்தில் காமெடி படமாக உருவாகி இருக்கும் படத்தில் ஜோதிகாவுடன் ரேவதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் முடிந்துள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவும் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.

ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். விஜய் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Jyothika #Revathi #Suriya

Tags:    

Similar News