சினிமா

முனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய மனிஷா யாதவ்

Published On 2019-04-02 13:55 GMT   |   Update On 2019-04-02 13:55 GMT
‘சண்டிமுனி’ படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் மனிஷா யாதவ், முனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடி இருக்கிறார். #ManishaYadav #SandiMuni
சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் டி.சிவராம் குமார் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘சண்டிமுனி’. நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கும், இதில் நாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், வாசுவிக்ரம், சாம்ஸ், ஆர்த்தி, தவசி, காதல் சுகுமார், உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

கதை திரைக்கதை வசனம் எழுதி மில்கா செல்வகுமார் இயக்குகிறார். இந்த படத்திற்காக சென்னை வளசரவாக்கம் பகுதியில் முனீஸ்வரன் கோயில் அரங்கமும் சிலையும் அமைக்கப்பட்டது. முப்பது அடி உயர சிலை அமைக்கப்பட்டு அதன் முன் மனிஷா யாதவ் பக்தி ரசம் சொட்ட ‘பெரும் கோபக்காரா எங்க சண்டி வீரா’ என்று பாட்டு பாடி ஆடிய பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியில் தீ மிதி காட்சிகளும் ஆணி செருப்பில் நடப்பது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது.



இப்படம் குறித்து இயக்குனர் மில்கா செல்வகுமார் கூறும்போது, ‘இது ஒரு ஹாரர் படம். நட்ராஜ் - மனிஷா யாதவ் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் நட்ராஜுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையில் இருந்து அவர் விடுபடவும் இருவருக்கும் திருமணம் நடக்கவும் குலதெய்வ வழிபாட்டு காட்சி தான் இது என்றார் இயக்குனர்.

பழனி, கொடைக்கானல், பொள்ளாச்சி, வால்பாறை போன்ற இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்தது. விரைவில் இதன் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News