சினிமா

இந்த மகிழ்ச்சியை ரஜினிகாந்த், முருகதாசுடன் பகிர்ந்து கொள்கிறேன் - எஸ்.ஜே.சூர்யா

Published On 2019-04-01 06:56 GMT   |   Update On 2019-04-01 06:56 GMT
சுரேஷ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் `உயர்ந்த மனிதன்' படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கும் மகிழ்ச்சியை ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாசுடன் பகிர்ந்து கொள்வதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். #UyarndhaManithan
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் 60 வருடங்களாக திரைத்துறையில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இதுவரை தமிழ் படத்தில் நடித்ததில்லை. தற்போது முதல்முறையாக நேரடி தமிழ்ப்படத்தில் எஸ்.சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

‘உயர்ந்த மனிதன்’ என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், எனது வாழ்க்கையின் மகிழ்வான தருணம் இது. நான் காணாத கனவை நிறைவேற்றிய கடவுளுக்கும், எனது பெற்றோருக்கும் நன்றி. அமிதாப் பச்சன் அவர்களுக்கும் நன்றி. எனது இந்த மகிழ்ச்சியை ரஜினிகாந்த் மற்றும்இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். தமிழ், மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தை கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இந்த இயக்குகிறார். 

உயர்ந்த மனிதன் படம் குறித்து தமிழ்வாணன் கூறும்போது, ‘எனது கனவு நிறைவேறியது. இதை விட நான் வேறு என்ன கேட்டு பெற்று விட முடியும். உலகெங்கும் புகழ் பெற்று, இந்திய திரை உலகின் முடிசூடா மன்னனாக திகழும் அமிதாப் சாருடன் பணி புரிவது மிக பெரிய பாக்கியம். தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் என் இயக்கத்தில் தான் என்பதே எனக்கு மிக பெரிய பெருமை’ என்றார். #UyarndhaManithan #AmitabhBachchan #SJSuryah

Tags:    

Similar News