ஆட்டோமொபைல்

விரைவில் இந்தியா வரும் பி.எம்.டபுள்யூ. எஸ் 1000.ஆர்.ஆர்.

Published On 2019-06-02 09:51 GMT   |   Update On 2019-06-02 09:51 GMT
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ் 1000 ஆர்.ஆர். மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.



பி.எம்.டபுள்யூ. நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றான எஸ் 1000.ஆர்.ஆர். மாடல் மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சாலைகளில் சீறிப் பாய வருகிறது.

இந்த மோட்டார்சைக்கிள் 999 சி.சி. திறன் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 207 பி.ஹெச்.பி. திறனை 13,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 113 என்.எம். டார்க் செயல்திறனை 11 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக்கூடியது. முந்தைய மாடலைக் காட்டிலும் புதிய மோட்டார்சைக்கிளில் 8 பி.ஹெச்.பி. திறன் கூடுதலாக புகுத்தப்பட்டுள்ளது.

பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் பிரத்யேக ஷிஃப்ட்காம் தொழில்நுட்பம் இதில் புகுத்தப்பட்டுள்ளது. ஏ.பி.எஸ்., டைனமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல் ஆகியன இதில் கூடுதல் அம்சங்களாகும். மழைச்சாலை, சாதாரண சாலை, டைனமிக் மற்றும் பந்தய சாலை என சாலைகளின் தன்மைக்கேற்ப இயங்கும் வகையில் மாற்றங்களைச் செய்ய முடியும்.



இதில் 6.5 டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக பிரெம்போ பிரேக்குகளுக்குப் பதிலாக ஹேயெஸ் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல சாக்ஸ் பிராண்ட் சஸ்பென்சன்கள் உள்ளன. 

வாகனத்தின் எடையைக் குறைப்பதற்காக இதில் ஸ்திரமான அதேசமயம் எடை குறைந்த உலோகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் எடை 197 கிலோவாகும். முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் எடை 11 கிலோ குறைவாகும்.

இதில் ஸ்டாண்டர்ட் மாடலின் விலை ரூ.18 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பிரீமியம் மாடல் விலை மேலும் சில லட்சங்கள் அதிகமாக இருக்கும் என்றும் சுமார் ரூ.25 லட்சம் வரை இருக்கலாம் என்றும் தெரிகிறது. 
இந்திய சாலைகளில் ஜீன் மாதம் 25 ஆம் தேதி இந்த மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய பி.எம்.டபுள்யூ. திட்டமிட்டுள்ளது.
Tags:    

Similar News