ஆட்டோமொபைல்

13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு

Published On 2019-04-10 12:47 GMT   |   Update On 2019-04-10 12:47 GMT
இந்தியாவில் 13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Scooter



உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகனமாக இந்திய ஆட்டோமொபைல் சந்தை இருக்கிறது. எனினும், கடந்த சில மாதங்களில் இருசக்கர வாகனங்களின் விற்பனை சரிவை சந்தித்து வருகிறது. இந்திய சந்தையில் 13 ஆண்டுகளில் முதல் முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிந்துள்ளது.

2018-19 நிதியாண்டில் மட்டும் மொத்தம் 67 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருக்கிறது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 0.27 சதவிகிதம் குறைவாகும். 



முன்னதாக 2005-06 நிதியாண்டில் ஸ்கூட்டர் விற்பனையில் 1.5 சதவிகிதம் சரிந்தது. வேலைவாய்ப்பு பிரச்சனை காரணமாக ஸ்கூட்டர் மற்றும் இருசக்கர வாகன விற்பனை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

ஜனவரி மாதம் முதல் இருசக்கர வாகனம் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனை சரிவை சந்திக்க துவங்கியது. பெரும்பாலான ஸ்கூட்டர் மற்றும் இருசக்கர வாகன பிராண்டுகள் உற்பத்தியை குறைத்துவிட்டன. 

இந்த வரிசையில் டி.வி.எஸ்., ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன.
Tags:    

Similar News