என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
விரைவில் இந்தியா வரும் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்15 Dec 2018 10:56 AM GMT (Updated: 15 Dec 2018 10:56 AM GMT)
சியோமி நிறுவனத்தின் ரெட்மி சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக இருப்பதை உணர்த்தும் வகையில், மூன்று ஸ்மார்ட்போன்கள் சீனாவில் சான்று பெற்றுள்ளன. #Redmi7 #Smartphones
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ஸ்மார்ட்போன் வெளியாகி ஒருமாதம் நிறைவுறாத நிலையில், அந்நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போனினை வெளியிட் தயாராகி வருகிறது.
நேஷ்வில் சேட்டர் வெளியிட்டிருக்கும் சமீபத்திய தகவல்களில் சீனாவின் கம்பல்சரி சர்டிஃபிகேட் வலைதளத்தில் M1901F7C, M1901F7E, மற்றும் M1901F7T என்ற மாடல் நம்பர்களுடன் மூன்று சியோமி ஸ்மார்ட்போன்கள் சான்று பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களில் 5V/2A சார்ஜிங் வசதி வழங்குவதற்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ரெட்மி ஸ்மார்ட்போன்களில் 5V/2A சார்ஜிங் வசதி பிரபலமாக இருக்கும் நிலையில், மூன்று ஸ்மார்ட்போன்களும் ரெட்மி சீரிஸ் ஆக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சியோமி நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களில் M18 என்ற மாடல் நம்பர் கொண்டிருந்த நிலையில், தற்போதைய ஸ்மார்ட்போன்கள் M19 என துவங்குவதை வைத்து பார்க்கும் போது மூன்று புதிய ஸ்மார்ட்போன்களும் 2019 ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X