search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நாற்பது நாட்களில் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த சாம்சங்
    X

    நாற்பது நாட்களில் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த சாம்சங்

    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் நாற்பது நாட்களில் சுமார் 20 லட்சம் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. #Samsung



    சாம்சங் நிறுவனம் மார்ச் 1 ஆம் தேதி முதல் இதுவரை மட்டும் சுமார் 20 லட்சம் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் சுமார் ரூ.3,482 கோடிகளை வருவாயாக ஈட்டியிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் இருந்து ரூ.27,700 கோடிகளை ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

    முன்னதாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ரூ.12,490 விலையில் அறிமுகம் செய்தது. இது சாம்சங் நிறுவனத்தின் நான்காவது கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனாக இருந்தது. 

    மார்ச் மாதத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ10 ரூ.8,490 விலையிலும், கேலக்ஸி ஏ30 ரூ.16,990 விலையிலும், கேலக்ஸி ஏ50 ரூ.19,990 மற்றும் ரூ.22,990 விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.



    மார்ச் 1 ஆம் தேதி துவங்கி சரியாக 40 நாட்களில் மொத்தம் 20 லட்சம் கேலக்ஸி ஏ மாடல்கள் - கேலக்ஸி ஏ50, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ10 உள்ளிட்ட மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்திருக்கிறது. இவற்றின் மூலம் மொத்தம் ரூ.3,482 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது என சாம்சங் இந்தியா மூத்த துணை தலைவர் ராஞ்சிவ்ஜித் சிங் தெரிவித்தார். 

    கேலக்ஸி ஏ சீரிஸ் மற்ற மாடல்கள் விற்பனைக்கு வரும் போது எங்களது இலக்கை அடைவோம் என அவர் மேலும் தெரிவித்தார். கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்கள் தொடர்ந்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தைகளில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி ஏ70 மற்றும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.25,000 - ரூ.30,000 என்றும் ரூ.45,000 - ரூ.50,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என சிங் தெரிவித்தார்.
    Next Story
    ×