search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரூ.700 கோடிக்கு ஏ.ஐ. நிறுவனத்தை வாங்கிய ரிலையன்ஸ் ஜியோ
    X

    ரூ.700 கோடிக்கு ஏ.ஐ. நிறுவனத்தை வாங்கிய ரிலையன்ஸ் ஜியோ

    ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சேவைகள் நிறுவனம் ஹேப்டிக் எனும் ஏ.ஐ. நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. #RelianceJio



    ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சர்வீசஸ் லிமிட்டெட் ஹேப்டிக் இன்ஃபோடெக் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பெரும்பான்மை (87 சதவிகிதம்) பங்குகளை வாங்கியிருப்பதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது.

    ஹேப்டிக் நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகள் தவிர மீதம் இருக்கும் பங்குகளை அதன் நிறுவனர்கள் மற்றும் ஊழியர்கள் பங்குகள் அடிப்படையில் வைத்திருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஹேப்டிக் இடையேயான வியாபார ஒப்பந்த மதிப்பு ரூ.700 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதில் முதற்கட்ட தொகை ரூ.230 கோடியாக இருக்கும் என கூறப்படுகிறது. பெரும்பான்மை பங்குகள் கைமாறியிருந்தாலும், ஹேப்டிக் நிறுவனம் துவங்கப்பட்டதன் நோக்கம் மற்றும் குறிக்கோளை எட்ட தொடர்ந்து பணியாற்றும் என ஹேப்டிக் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஹேப்டிக் நிறுவனம் டிஜிட்டல் அசிஸ்டண்ட் சேவையை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என தெரிவித்துள்ளது.



    ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு சாதனங்கள் மற்றும் துறைகளில் ஹேப்டிக் திறமைகளை பயன்படுத்திக் கொள்ளும் என தெரிகிறது. முதலீட்டின் முக்கிய நோக்கம் தளத்தை மேம்படுத்துவது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹேப்டிக்கின் தற்போதைய சர்வதேச வியாபாரம் மேலும் ஊக்குவிக்கப்படும் என்றும் இந்நிறுவனம் தொடர்ந்து உலகளவில் ஏ.ஐ. சேவைகளை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோவுடனான ஒப்பந்தம் காரணமாக 2016 ஆம் ஆண்டு ஹேப்டிக் நிறுவத்தில் முதலீடு செய்த டைம்ஸ் இண்டர்நெட் ஹேப்டிக் வியாபாரங்களில் இருந்து வெளியேறும் என ஹேப்டிக் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×