search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐ.பி.எல். 2019 - பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு
    X

    ஐ.பி.எல். 2019 - பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு

    இந்திய பிரீமியர் லீக் 2019 போட்டிகள் துவங்கியதை தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவன பீரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. #BSNL #IPL2019



    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய பிரீமியர் லீக் கிரிகெட் தொடர் துவங்கியிருப்பதை தொடர்ந்து புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 

    ரூ.199 மற்றும் ரூ.499 விலையில் கிடைக்கும் இரு சலுகைகளில் பயனர்களுக்கு டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் இலவச கிரிகெட் எஸ்.எம்.எஸ். அலெர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் போட்டி பற்றிய தகவல்கள் பயனர்களுக்கு எஸ்.எம்.எஸ். வடிவில் அனுப்பப்படும்.

    பி.எஸ்.என்.எல். ரூ.199 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இலவச அழைப்புகள் ஒரு வட்டாரத்திற்கு மட்டுமே பொருந்தும் என்பதால், பயனர்கள் மற்ற வட்டாரங்களில் பேச தனி கட்டணம் வசூலிக்கப்படும். அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தவிர பயனர்களுக்கு 1 ஜி.பி. டேட்டா தினமும் வழங்கப்படுகிறது.



    28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் இச்சலுகையில் பயனர்களுக்கு ஐ.பி.எல். கிரிகெட் போட்டிகள் தொடர்பான தகவல்கள் எஸ்.எம்.எஸ். வடிவில் இலவசமாக வழங்கப்படுகின்றன. ரூ.199 மற்றும் ரூ.499 சலுகைகள் இந்தியா முழுக்க 20 வட்டாரங்களில் வழங்கப்படுகிறது.

    ரூ.499 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங்குடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., இலவச கிரிகெட் போட்டி தொடர்பான எஸ்.எம்.எஸ்.கள் வழங்கப்படுகிறது. இச்சலுகை 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. 

    தினமும் 1 ஜி.பி. டேட்டா போதாது என்போருக்கு ஜியோ ரூ.149 விலையில் வழங்கும் சலுகையை பயன்படுத்தலாம். இச்சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
    Next Story
    ×