என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
டிக்டாக் செயலி மீது 57 லட்சம் டாலர்கள் அபராதம் விதித்த அமெரிக்கா
Byமாலை மலர்2 March 2019 11:50 AM GMT (Updated: 2 March 2019 11:50 AM GMT)
உலகின் பிரபல செயலிகளில் ஒன்றாக வளர்ந்து வரும் டிக்டாக் அமெரிக்கா வத்தக சபையில் 57 லட்சம் டாலர்களை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. #TikTok
இளைஞர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் டிக்டாக் செயலி சமீபத்தில் 100 கோடி டவுன்லோடுகளை கடந்ததாக அறிவித்தது. இந்நிலையில், டிக்டாக் செயலி அமெரிக்காவில் குழந்தைகளின் தனியுரிமை விதிகளை மீறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது.
13 வயதிற்கும் குறைவான குழந்தைகளிடம் இருந்து தகவல்களை சேகரித்ததாக டிக்டாக் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அந்நிறுவனம் 57 லட்சம் டாலர்களை அபராதமாக செலுத்த அமெரிக்க வர்த்தக சபை உத்தரவிட்டது. இந்நிலையில், அபராத தொகையை செலுத்துவதாக டிக்டாக் அறிவித்துள்ளது.
மியூசிக்கல்.லி என்ற பெயரில் அறியப்பட்டு பின் டிக்டாக் என்ற வடிவில் இயங்கி வரும் செயலி சிறுவர்கள் பதிவிடும் தகவல்களை பதிவு செய்ததாக அமெரிக்க வர்த்த சபை குற்றம்சாட்டியது. 100 கோடி பேர் பயன்படுத்தி வரும் டிக்டாக் செயலியில் குறிப்பிட்ட சதவிகிதம் (அமெரிக்காவில் 65 லட்சம் பேர்) 13 வயதுக்கும் குறைவானோர் ஆகும்.
டிக்டாக் செயலியை அதிக சிறுவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்த போதும், டிக்டாக் நிர்வாகம் பெற்றோர் அனுமதியின்றி சிறுவர்களிடம் தகவல்களை பெற்றதாக வர்த்தக சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அபராத தொகை மற்ற ஆன்லைன் சேவை நிறுவனங்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என அமெரிக்க வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
டிக்டாக் செயலியில் இளைஞர்கள் பிரபல வீடியோக்களில் அவரவர் விரும்பும் பகுதியில் 15 விநாடிகளுக்கு லிப்-சின்க் செய்து அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அமெரிக்க வர்த்தக சபையின் விதிமுறைகளுக்கு உட்படும் வகையில் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு என பிரத்யேகமாக தனி செயலியை உருவாக்குவதாக டிக்டாக் அறிவித்துள்ளது. இந்த செயலி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளாது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X