என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
பயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்
Byமாலை மலர்23 Feb 2019 6:19 AM GMT (Updated: 23 Feb 2019 6:19 AM GMT)
ஃபேஸ்புக்குடன் இணைந்து செயல்படும் பல்வேறு செயலிகள் பயனரின் தனிப்பட்ட தகவல்களை ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Apps
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டிருக்கும் சமீபத்திய தகவல்களில் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பல்வேறு செயலிகள் பயனரின் விவரங்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்களின் விவரங்களையும் ஃபேஸ்புக் பெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனரின் போன் மற்றும் இணைய நடவடிக்கைகளை சேகரிக்க வழி செய்யும் செயலியை இன்ஸ்டால் செய்ய ஃபேஸ்புக் இளம் பயனர்களுக்கு பணம் கொடுத்திருந்தது. இதனால் ஆப்பிள் நிறுவனம் ஃபேஸ்புக்கிற்கு வழங்கியிருந்த சிறப்பு அனுமதிகளில் சிலவற்றை திரும்ப பெற்றது.
வெளியீட்டு முன் பணியாளர்களின் மத்தியல் சோதனை செய்யப்பட வேண்டிய அம்சம் மூலம் செயலியை இடையூறு செய்து ஃபேஸ்புக் ஆப்பிள் நிறுவன விதிகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆப்பிள் தெரிவித்தது. ஆப்பிள் இயங்குதளத்தில் உடல்நலம் மற்றும் ரியல் எஸ்டேட் செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு பயனர் விவரங்களை அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த செயலிகள் ஃபேஸ்புக்கின் மென்பொருள் வளர்ச்சி முணையத்தின் (எஸ்.டி.கே.) வழியே பயனர் விவரங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த முணையம் செயலிகளில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. ஃபேஸ்புக்கின் எஸ்.டி.கே.வில் ஆப் டெவலப்பர்களை பயனர் டிரெண்ட்களை அறிந்து கொள்ள உதவுகிறது.
இவைதவிர ஃபேஸ்புக்கிற்கு மிகமுக்கிய விவரங்களை வழங்கிய செயலிகள் அனைத்தும் கஸ்டம் ஆப் ஈவென்ட்களை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக் மீது விசாரணை செய்ய நியூ யார்க் நகர நிதி துறைக்கு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X