என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
சமூக வலைதளங்களில் பயனர் விவரங்களை நிரந்தரமாக அழிக்க முடியாது - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
Byமாலை மலர்23 Jan 2019 12:39 PM GMT (Updated: 23 Jan 2019 12:39 PM GMT)
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பயனர் விவரங்களை நிரந்தரமாக அழிக்க முடியாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Twitter #socialmedia
ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் உலகம் முழுக்க பிரபலமாக அறியப்படுகின்றன. சமூக வலைதளங்களை பயன்படுத்தி உலகின் பல நாடுகளை சேர்ந்த அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்கின்றன.
நண்பர்கள் தங்கள் கருத்துக்களையும், செயல்பாடுகளையும், நட்பையும் பகிர்ந்து கொள்கின்றனர். வர்த்தகர்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்கி பணம் சம்பாதிக்கின்றனர். இது போன்று எத்தனையோ நன்மைகள் சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படுகின்றன.
அதே நேரத்தில் இங்கு தனி மனித ரகசியங்களை எப்போதும் பாதுகாக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் வலைதளத்தில் ரகசிய குறியீடுகளை பயன்படுத்தி உள்ளே நுழைந்து மிகப் பெரிய தகவல் திருட்டு நடந்தது. இதை தொடர்ந்து பலர் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைதள கணக்கில் இருந்து விலகினார்கள். இவற்றை பலர் தவறாக பயன்படுத்தியதாக கூறி நீக்கப்பட்டனர்.
ஆனால் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்கில் இருந்து ஒருவர் விலகினாலும், நீக்கினாலும் அதில் அவர் பதிவிட்டு இருந்த தகவல்களை அழிக்க முடியாது. இதன் மூலம் தனி மனித ரகசியத்துக்கு ஆபத்து உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அமெரிக்காவின் வெர்மான்ட் பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகமும் இணைந்து தீவிர ஆய்வு மேற்கொண்டது.
ட்விட்டரில் 13,905 பேர் பதிவு செய்த 3 கோடி தகவல் திரட்டுகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. அதே போன்று ஃபேஸ்புக்கில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு கம்பெனியோ, அரசாங்கமோ அல்லது நடிகரோ, சாதாரண குடிமகனோ யாராக இருந்தாலும் இவற்றில் இருந்து விலகினாலும், நீக்கப்பட்டாலும் அவர்களின் தகவல்களை மீண்டும் பெற முடியும். ரகசியங்கள் பாதுகாக்க முடியாது என தெரியவந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X