என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
என்ன செய்தும் பலனில்லை - ஃபேஸ்புக் மீது குற்றஞ்சாட்டும் சாம்சங் பயனர்கள்
Byமாலை மலர்10 Jan 2019 5:07 AM GMT (Updated: 10 Jan 2019 5:07 AM GMT)
சாம்சங் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தங்களது மொபைல்களில் ஃபேஸ்புக் செயலியை அன்இன்ஸ்டால் செய்ய முடியவில்லை என குற்றஞ்சாட்டி வருகின்றனர். #Samsung #Facebook
சாம்சங் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தங்களது சாதனங்களில் ஃபேஸ்புக் செயலியை அன்இன்ஸ்டால் செய்ய முடியவில்லை என குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.
ஸ்மார்ட்போன்களில் பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஃபேஸ்புக் செயலியை அழிக்க முடிவதில்லை என பெரும்பாலானோர் தெரிவிக்கின்றனர். தனிப்பட்ட விவரங்களின் பாதுகாப்பு கருதியோ, செயலியை தொடர்ந்து பயன்படுத்த விருப்பமில்லை, ஃபேஸ்புக் அதிக மெமரியை எடுத்துக் கொள்கிறது போன்ற காரணங்களால் செயலியை அன்-இன்ஸ்டால் செய்ய முயற்சிப்பவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சுகிறது.
சமீபத்தில் வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ்புக், மின்னஞ்சல், ட்விட்டர், அமேசான், மெசஞ்சர் மற்றும் இதர செயலிகள் பிரீஇன்ஸ்டால் செய்யப்படுகிறது. இவற்றுடன் சில கூகுள் செயலிகளும் அடங்கும். இவ்வாறு பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் செயலிகளில் சிலவற்றை மட்டும் செயலிழக்க செய்ய முடியும் என்றாலும், சிலவற்றை அன்இன்ஸ்டால் செய்ய முடியாது.
சாம்சங் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் சில பயனர்கள் தங்களது மொபைலில் பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஃபேஸ்புக் செயலியை டெலீட் செய்வதற்கான ஆப்ஷனே வழங்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு எஞ்சியிருக்கும் ஒற்றை ஆப்ஷன் ஃபேஸ்புக் கணக்கை டி-ஆக்டிவேட் செய்வது மட்டும் தான். இவ்வாறு செய்தாலும் ஃபேஸ்புக் ஐகான் ஸ்மார்ட்போனில் அப்படியே இருக்கும்.
பயனற்று இருக்கும் சமூக வலைத்தள ஐகான்கள் ஸ்மார்ட்போன்களின் மெமரியை ஆக்கிரமித்துக் கொள்வதை தவிர வேறு எதையும் செய்வதில்லை. எனினும், சாம்சங் பயனர்கள் தரப்பில், ஃபேஸ்புக் செயலி பயனர் விவரங்களை பின்னணியில் சேகரிக்கிறதா என்ற அச்சம் பயனர்கள் மனதில் எழுகிறது.
இதுகுறித்து ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறும் போது “செயலிழக்க செய்யப்பட்ட செயலி கிட்டத்தட்ட அழிக்கப்பட்டதற்கு சமமானது. இதனால் பயனர் விவரங்கள் சேகரிக்கப்படாது. எனினும், அவ்வப்போது இதுபற்றி பயனர்களுடன் தகவல் பரிமாற்றம் நடைபெறும்.” என தெரிவித்தார்.
“செயலி அழிக்கக்கூடியதாக இருப்பது ஃபேஸ்புக் கடந்த காலங்களில் மொபைல் போன் உற்பத்தியாளர்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களை பொருத்து வேறுபடும்,” என ஃபேஸ்புக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X