search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    X

    சாம்சங் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    சாம்சங் நிறுவனத்தின் மிட்-ரேன்ஜ் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung



    ஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது சாதனங்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கி வருகின்றன. 

    அந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் இமைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் மற்ற நிறுவனங்களை விட சாம்சங் வித்தியாசமாக முயற்சிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    சாம்சங் நிறுவனம் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கலாம் என்றும், இதற்கென சாம்சங் குவால்காம் நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரை சாம்சங் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் தனது கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் புதிய தொழில்நுட்பத்தை வழங்க இருப்பதாக கூறப்பட்டது.



    ஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்ட தகவல்களின் படி, கைரேகை சென்சார் தொழில்நுட்பம் 2019ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு பிரத்யேகமாக இருக்கும் என சாம்சங் எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கிறார். புதிய கைரேகை சென்சார் தொழில்நுட்பம் தற்போதைய இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பங்களை விட வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனில் 30 சதவிகித பகுதியை ஆக்கிரமித்து இருக்கும் என்றும், இது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் குறிப்பிட்ட பகுதியில் சிறிய வட்டமாக இருப்பதால், புதிய தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    2018 மற்றும் 2019ம் ஆண்டிற்கான புதிய ஸ்மார்ட்போன்களில் வழங்குவதற்கான புதிய சிப்களை சாம்சங் ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சாம்சங் புதிய தொழில்நுட்பத்தை மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களிலும் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×