என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
மீடூ விவகாரம் போராட்டத்தில் குதித்த கூகுள் பணியாளர்கள்
Byமாலை மலர்2 Nov 2018 8:32 AM GMT (Updated: 2 Nov 2018 8:32 AM GMT)
மீடூ விவகாரம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கூகுள் பணியாளர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். #GoogleWalkout
‘மீ டூ’ இயக்கம் தற்போது உலகம் முழுவதும் பிரபல மடைந்துள்ளது. தொடக்கத்தில் ஆசிய நாடுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த அமைப்பு ஐரோப்பாவிலும், அதை தொடர்ந்து வடஅமெரிக்கா நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இது சர்வதேச அளவில் பிரபல நிறுவனமான கூகுளையும் அதிர வைத்துள்ளது. இங்கு பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகள் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்தன. அதை ஏற்றுக் கொண்ட கூகுள் நிறுவன தலைமை அதிகாரி சுந்தர்பிச்சை. இது தொடர்பாக 2 ஆண்டுகளில் 48 அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கூறி இருந்தார்.
இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் பணிபுரியும் கூகுள் நிறுவன ஊழியர்கள், கூகுளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் உள்ள குர்கான், ஐதராபாத், மும்பை மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஷீரீச், டியூப்ளின், பெர்லின், சிங்சப்டர், லண்டன் உள் ளிட்ட நகரங்களிலும் இப்போராட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் உள்ள 4 கூகுள் நிறுவனங்களில் பணிபுரியும் 150 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மவுன்டெயின் வியூ பகுதியில் அமைந்துள்ளது. அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
‘செக்ஸ்’ குற்றம் இழைப்பவர்களுக்கு எதிராக வாசகங்களுடன் கூடிய அட்டைகளை ஏந்தி இருந்தனர். நீலநிற ரிப்பன்களை அணிந்திருந்தனர். நியூயார்க், மேன்காட்டன், அட்லாண்டாவில் உள்ள கூகுள் நிறுவனங்களின் ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை இது குறித்து ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஊழியர்களின் பாதுகாப்பு ஒரு திடமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X