search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒரு ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் விற்பனை செய்யும் சியோமி
    X

    ஒரு ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் விற்பனை செய்யும் சியோமி

    சியோமி இந்தியா தீபாவளி விற்பனையின் இரண்டாவது நாளில் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போனினை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. #DiwaliWithMi



    சியோமி நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையில் மொபைல் போன்கள், தொலைகாட்சி, உபகரணங்கள் மற்றும் பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இரண்டாவது நாளான இன்று ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வை2 மற்றும் Mi ஏ2 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

    முதல் நாள் விற்பனையில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் ஒரு ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நாளான இன்று ரெட்மி நோட் 5 ப்ரோ கோல்டு நிற வேரியன்ட் ஒரு ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.14,999 எனும் துவக்க விலையில் கிடைக்கிறது. 

    ஒரு ரூபாய் ஃபிளாஷ் விற்பனை மட்டுமின்றி பண்டிகை கால சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.2,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் ஃபிளாஷ் விற்பனை சியோமியின் Mi.com வலைதளத்தில் இன்று (அக்டோபர் 24) மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது.



    இன்று மாலை நடைபெறும் ஃபிளாஷ் விற்பனையில் வாடிக்கையாளர்கள் ரெட்மி நோட் 5 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலை ஒரு ரூபாய் விலையில் வாங்கிட முடியும். விற்பனை துவங்கும் முன் பயனர்கள் தங்களது Mi அக்கவுன்ட்டில் லாக் இன் செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் பயனர்கள் தங்களது கார்டு விவரங்கள் மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை ஃபிளாஷ் விற்பனை துவங்கும் முன் பதிவு செய்து கொள்ளலலாம். இதனால் விரைவில் பரிமாற்றத்தை நிறைவு செய்து சலுகையை பெறும் வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம். 

    தீபாவளி விற்பனை காலத்தில் வாடிக்கையாளர்கள் Mi பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கிட முடியும். அந்த வகையில் Mi ஏ2 ஸ்மார்ட்போன் ரூ.2000 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ 43-இன்ச் மாடல் ரூ.1,000 தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. #Xiaomi #DiwaliWithMi
    Next Story
    ×