search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அதிநவீன அம்சங்களை அறிமுகம் செய்யும் சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்
    X

    அதிநவீன அம்சங்களை அறிமுகம் செய்யும் சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனில் அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட இருப்பது இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் தெரியவந்துள்ளது. #Samsung



    சாம்சங் 2018 OLED நிகழ்வில், அந்நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டது. இவை பெரும்பாலும் OLED சார்ந்த தொழில்நுட்பங்களாகவே இருந்தன. 

    சாம்சங் அறிவிப்புகளில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், இன்-ஸ்கிரீன் கேமரா சென்சார் தொழில்நுட்பம், டச்-சென்சிட்டிவ் தொழில்நுட்பம் மற்றும் ஸ்கிரீன் சவுன்ட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. புதிய தொழில்நுட்பங்களை வழங்குவதற்கான பணிகளில் சாம்சங் ஈடுபட்டுள்ள நிலையில், இவை வரும் காலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படலாம் என தெரிகிறது.

    புதிய தொழில்நுட்பம் முன்பக்க கேமராவினை டிஸ்ப்ளேவின் கீழ் மறைக்கும். மேலும் இந்த தொழில்நுட்பம் ப்ரோடோடைப்களில் முழுவீச்சில் சோதனை செய்யப்படுவதாகவும், இவை 2020-ம் ஆண்டு வாக்கில் பரவலாக வழங்கப்படலாம் என சாம்சங் அறிவித்துள்ளது.

    கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தொழில்நுட்பத்திற்கான சோதனைகள் துவக்க நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. 

    இன்-டிஸ்ப்ளே கேமரா மட்டுமின்றி, சாம்சங் நிறுவனம் புதிதாக கேமிங் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மாபர்ட்போனின் திரையில் ஹேப்டிக் ஆன்-டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தில் கேம் பட்டன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகவில்லை. 
    Next Story
    ×