search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி வெளியீட்டு விவரம்
    X

    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி வெளியீட்டு விவரம்

    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகள் வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. #Jio



    இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. போட்டி நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணங்களை குறைத்தும், ஏற்கனவே வழங்கி வரும் சலுகைகளில் கூடுதல் பலன்களை அறிவித்து வருகின்றன.

    புதிய சலுகை மட்டுமின்றி நாட்டில் 4ஜி சேவை பயன்பாடும் வேகமாக அதிகரிக்க ரிலையன்ஸ் ஜியோ மிகமுக்கிய காரணமாக இருந்தது. அந்த வகையில், மற்ற நிறுவனங்களுக்கு முன்னதாகவே 5ஜி சேவைகளையும் முதலில் வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து இணையத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்ற ஆறே மாதங்களில் இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்க ஜியோ திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 



    இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற இருக்கும் நிலையில், இந்தியாவில் ஜியோ 5ஜி சேவைகள் 2020-ம் ஆண்டின் மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

    “5ஜி-க்கு தேவையான எல்.டி.இ. நெட்வொர்க் ஜியோவிடம் தயார் நிலையில் இருக்கிறது, மேலும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆறு மாதங்களில் வழங்க முடியும்,” என பெயர் அறியப்படாத அதிகாரி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    எனினும் இதை செயல்படுத்துவதில் இருக்கும் மிகப்பெரிய சவால், புதிய தொழில்நுட்பத்தை சீராக இயக்கும் சாதனங்கள் வெளிவர வேண்டும். புதிய தொழில்நுட்பம் தற்போதைய 4ஜி-யை விட அதிவேகமாக இணைய இணைப்பை பயனர்களுக்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×