என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
விரைவில் இந்தியா வரும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்18 Aug 2018 8:18 AM GMT (Updated: 18 Aug 2018 8:18 AM GMT)
விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #VivoV11 #smartphone
விவோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனினை செப்டம்பர் 6-ம் தேதி இந்தியாவில் வெளியிட இருக்கிறது. புதிய வெளியீட்டு நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை விவோ அனுப்பி வருகிறது.
இந்நிலையில், அழைப்பிதழில் 06.09.2018-ம் தேதி 11-ஐ அனுபவியுங்கள் என்ற வாசகம் ஆங்கில மொழியில் அச்சிடப்பட்டுள்ளது. அதன்படி விவோ வி11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்த விவோ வி9 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இணையத்தில் லீக் ஆன விவரங்களின் படி புதிய விவோ ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் FHD பிளஸ் வாட்டர் டிராப் போன்ற ஸ்கிரீன் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இதே போன்ற அம்சம் ஒப்போ எஃப்9 (ப்ரோ) மாடலிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 AIE சிப்செட், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, புகைப்படங்களை எடுக்க 12 + 5 எம்பி டூயல் பிரைமரி கேமரா, 25 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் சமீபத்திய படத்தில் கிரேடியன்ட் பாடி வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதே போன்ற வடிவைப்பு கொண்ட விவோ X23 ஸ்மார்ட்போன் விரைவில் சீனாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் தெரியவரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X