என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
1.43 லட்சம் செயலிகள் ட்விட்டரில் இருந்து அதிரடியாக நீக்கம்
Byமாலை மலர்25 July 2018 9:35 AM GMT (Updated: 25 July 2018 9:35 AM GMT)
ட்விட்டரில் இருந்து தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் சுமார் 1,43,000 செயலிகள் தளத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #TwitterPurge
ட்விட்டர் தளத்தில் போலி செயலிகள் இடம்பெறாமல் இருக்க பல்வேறு மாற்றங்களை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கூடுதலாக பயனர்களுக்கு கெட்ட செயலிகளை குறிப்பிடும் வசதியும் வழங்கப்படுகிறது.
கெட்ட செயலிகள் தளத்தை பயன்படுத்துவோரின் தனியுரிமைக்கு தீங்கு விளைவிக்கும். ட்விட்டரின் வழக்கமான API-க்களை இயக்க முதன்முறையாக அனுமதி கோரும் டெவலப்பர்கள் தங்களது செயலிகளை பதிவு செய்ய புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவு செய்யும் டெவலப்பர்கள் தங்களது முழு விவரங்களுடன் ட்விட்டர் API-க்களை எவ்வாறு பயன்படுத்த இருக்கின்றனர் என்ற விவரங்களையும், இவ்வாறு பயன்படுத்துவது பயனுரின் அனுபவத்தை எந்த வகையில் சிறப்பானதாக மாற்றும் என்பதை விரிவாக வழங்க வேண்டும்.
கோப்பு படம்
புதிய வழிமுறைகளின் கீழ் ட்விட்டர் API-க்களை பயன்படுத்த டெவலப்பர்கள் சில புதிய அம்சங்கள் மற்றும் கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும் என்றாலும், தொடர்ந்து டெவலப்பர்களுக்கு உயர்-ரக, விதிமுறைகளுக்குள் சிறப்பான அனுபவத்தை வழங்குவோம் என ட்விட்டர் வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே பதிவு செய்திருக்கும் டெவலப்பர்களும் தங்களது API-க்களை இயக்க புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ட்விட்டர் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கான நேரத்தை ட்விட்டர் சரியாக குறிப்பிடவில்லை, என்றாலும் டெவலப்பர்கள் புதிய வழிமுறைகளை துவங்கும் முன் 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் ட்விட்டர் தளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் 1,43,000 செயலிகளும், ட்விட்டர் விதிமுறைகளை மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #TwitterPurge
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X