என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
வாட்ஸ்அப் செயலியை இனி இப்படி பயன்படுத்த முடியாது
Byமாலை மலர்21 July 2018 9:26 AM GMT (Updated: 21 July 2018 9:26 AM GMT)
வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில், புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் மூலம் இனி செயலியை இவ்வாறு பயன்படுத்த முடியாது. #WhatsApp #Apps
இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் அதிகம் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. நாடு முழுக்க சுமார் 20 கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் புதிய மாற்றங்கள் தற்சமயம் சோதனை செய்யப்படும் நிலையில், விரைவில் பயனர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப்-இல் பகிர்ந்து கொள்ளப்படும் குறுந்தகவல்களில் புகைப்படம், வீடியோ அல்லது ஜிஃப் போன்றவற்றுடன் ஃபார்வேர்டு பட்டன் நீக்கப்படுகிறது. இத்துடன் ஃபார்வேர்டு மெசேஜ் எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது, எனினும் இந்தியாவில் மட்டுமே இவ்வாறு செய்யப்படுகிறது.
இந்தியா தவிர்த்து மற்ற சந்தைகளில் ஃபார்வேர்டு செய்யப்படும் எண்ணிக்கையை 20-ஆக நிர்ணயம் செய்கிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஆன்ட்ராய்டு பீட்டா டெஸ்ட் செய்வோருக்கு வழங்கப்பட்டு அதன் பின் மற்றவர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய அம்சம் சர்வெர்-சார்ந்த அப்டேட் கிடையாது என்பதால், பீட்டா அல்லத பயனர்களுக்கு சாதாரண ஆப் அப்டேட் போன்றே வழங்கப்படும். இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பது குறித்தும் தனிநபர் மற்றும் க்ரூப் சாட்களில் எவ்வாறு இருக்கும் போன்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.
முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவல்களில் ஃபார்வேர்டு லேபெல் சேர்க்கப்பட்டது. நாடு முழுக்க போலி செய்திகள் சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகரிப்பதை தொடர்ந்து போலி செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு அம்சங்களை வாட்ஸ்அப் சோதனை செய்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X