என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
பிளிப்கார்டில் அதிக பங்குகளை வாங்கும் வால்மார்ட்
Byமாலை மலர்21 April 2018 9:33 AM GMT (Updated: 21 April 2018 9:33 AM GMT)
இந்தியாவின் பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான பிளிப்கார்ட்-இல் சுமார் 51% பங்குகளை வால்மார்ட் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
இந்திய ஆன்லைன் வர்த்தக வலைத்தளமான பிளிப்கார்ட்-இன் சுமார் 51% பங்குகளை வால்மார்ட் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அமேசானை எதிர்கொள்ள பிளிப்கார்ட் தளத்தில் அதிகப்படியான பங்குகளை வாங்க வால்மார்ட் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய ஆன்லைன் சந்தை மதிப்பு அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார் 20,000 கோடி அமெரிக்க டாலர்கள் அளவு வளர்ச்சி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தின் முக்கிய முதலீட்டாளரான சாஃப்ட்பேங்க் க்ரூப் தனது பங்குகளை விற்பனை செய்வதில் அதிக ஆர்வம் செலுத்துவதாக தெரியவில்லை என இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 1200 கோடி அமெரிக்க டாலர்களுக்கு தனது பங்குகளை விற்பனை செய்வதில் சாஃப்ட்பேங்க் விரும்பவில்லை என கூறப்பட்டது. எனினும் சாஃப்ட்பேங்க் மற்றும் வால்மார்ட் இடையேயான பிரச்சனை தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்சமயம் பிளிப்கார்ட் தளத்தின் பங்குகளை விற்பனை செய்ய சாஃப்ட்பேங்க் ஒப்புகொண்டது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
கோப்பு படம்
பிளிப்கார்ட்-ஐ வால்மார்ட் வாங்கும் பட்சத்தில் பிளிப்கார்ட் மதிப்பு 1800 கோடி அமெரிக்க டாலர்கள் ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் பிளிப்கார்ட் தளத்தின் 51% அல்லது அதற்கும் அதிக பங்குகளை வாங்க வால்மார்ட் சுமார் 1000 முதல் 1200 கோடி அமெரிக்க டாலர்களை வழங்குவதாக தெரிவித்ததாக கூறப்பட்டது.
இதனிடையே பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் இடையேயான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டாலும், ஒப்பந்தம் மே மாத முதல் வாரம் வரை உறுதி செய்யப்படாது என கூறப்படுகிறது. பிளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட் வாங்கும் பட்சத்தில் யுஎஸ் ஹெட்ஜ் ஃபன்ட் டைகர் குளோபல் மேனேஜ்மென்ட், தென்னாப்பிரிக்காவின் நாஸ்பர்ஸ் மற்றும் அக்செல் போன்ற தற்போதைய முதலீட்டாளர்கள் பிளிப்கார்ட் உடனான கூட்டணியை முறித்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
பிளிப்கார்ட் நிறுவனர்களான சச்சின் மற்றும் பின்னி ப்னசால் ஆகியோர் தங்களது பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுறது. எனினும் பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் சார்பில் இதுகுறித்து இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவும் இல்லை, இந்த தகவல்களை மறுக்கவும் இல்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X