என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
விரைவில் ஜியோபோனிலும் வாட்ஸ்அப்
Byமாலை மலர்22 March 2018 7:27 AM GMT (Updated: 22 March 2018 7:27 AM GMT)
ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோனில் விரைவில் வாட்ஸ்அப் வசதி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.
மும்பை:
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்த ஸ்மார்ட் ஃபீச்சர்போன் ஜியோபோன் லினக்ஸ் சார்ந்த இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. கை ஓஎஸ் என அழைக்கப்படும் ஜியோபோன் இயங்குதளத்தில் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலி சார்ந்த விவரங்களை முன்கூட்டியே கச்சிதமாக வழங்குவதில் பெயர்பெற்ற WABetaInfo சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் விண்டோஸ் போன் பீட்டாவில் கை ஓஎஸ்இ-ல் தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுல்ளது.
லினக்ஸ் சார்ந்து இயங்கும் கை ஓஎஸ் மிகவும் குறைந்த மெமரி கொண்ட சாதனங்களில் சீராக வேலை செய்யும் படி உருவாக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தொடு திரை வசதியில்லாத மொபைல் போன்களில் வேலை செய்யும் படி இது உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஃபீச்சர்போன்களுக்கு ஏற்ற இயங்குதளமாக இது இருக்கிறது.
கோப்பு படம்: ஜியோபோன்
இந்தியாவில் ரூ.1,500க்கு கிடைக்கும் ஜியோபோன் மூன்று ஆண்டுகளில் திரும்ப வழங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,500 திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், விரைவில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் கை ஓஎஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் ஃபேஸ்புக் உள்பட பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்து இருந்து. அந்த வகையில் இதுபோன்ற செயலிகள் விரைவில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
தற்சமயம் வாட்ஸ்அப் செயலி சிம்பயன் 40 என ஃபீச்சர் போன் இயங்குதளத்தில் வேலை செய்கிறது. எனினும் இதற்கான சப்போர்ட் இந்த ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட இருக்கிறது. கூகுள் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் கை ஓஎஸ் நிறுவனத்துடன் இணைந்து அசிஸ்டண்ட் சேவையை வழங்க இருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X