search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலில் M2 பிராசஸர், புதிய R1 சிப் உள்ளது.
    • விஷன் ப்ரோ மாடலில் வைபை 6, ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் விஷன் ப்ரோ மாடலுக்கான முன்பதிவு துவங்கியது. முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டுமே விஷன் ப்ரோ ஹெட்செட்டுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளன. முன்பதிவை தொடர்ந்து பிப்ரவரி 2-ம் தேதி இதன் விற்பனை துவங்குகிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலில் ஆப்பிளின் M2 பிராசஸர் மற்றும் புதிய R1 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விஷன் ப்ரோ ஹெட்செட் உடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரு ஹெட்பேன்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் மினிமலிஸ்ட் சோலோ நிட் பேன்ட், ஸ்டேபிலிட்டி கொண்ட டூயல் லூப் பேன்ட் வழங்கப்படுகிறது. இந்த ஹெட்செட்-இன் பெட்டி வெளிச்சம் புகாத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் மென்மையானை குஷன்கள் உள்ளன.

     


    அம்சங்களை பொருத்தவரை விஷன் ப்ரோ மாடலில் 23 மில்லியன் பிக்சல்கள் அடங்கிய, அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே சிஸ்டம் இரு டிஸ்ப்ளேக்களிடையே வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ், 96 ஹெர்ட்ஸ் மற்றும் 100 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்களை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டுள்ளது.

    இத்துடன் பிரத்யேக டூயல் சிப் டிசைன் மற்றும் ஆப்பிள் சிலிகான் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் அசாத்திய டிஸ்ப்ளே அனுபவத்தை பயனர்களுக்கு கடத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் கொண்டு பயனர்கள் தங்களின் நினைவுகளை திரும்பி பார்க்கலாம்.

     


    ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலில் வைபை 6, ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, அதிகபட்சம் 1080 பிக்சல் தரத்தில் ஏர்பிளே சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மொத்தம் ஆறு மைக்ரோபோன்கள், இரண்டு பிரைமரி கேமரா சென்சார்கள், ஆறு டிராக்கிங் கேமராக்கள், கண்களை டிராக் செய்ய நான்கு கேமராக்கள், LiDAR ஸ்கேனர், ட்ரூடெப்த் கேமரா மற்றும் ஆறு சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

    விஷன் ப்ரோ ஹெட்செட் வெளிப்புற பேட்டரி பேக் மூலம் சக்தியூட்டப்படுகிறது. பேட்டரி பேக்-ஐ பயனர்கள் தனி கேபிள் மூலம் விஷன் ப்ரோ ஹெட்செட் உடன் இணைத்து சார்ஜிங் செய்து கொள்ளலாம். இதில் உள்ள பேட்டரிகளின் திறன் குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. விஷன் ப்ரோ ஹெட்செட்-இன் எடை 650 கிராம்கள் வரை இருக்கலாம். தனியே வழங்கப்படும் பேட்டரி பேக் எடை 353 கிராம் ஆகும்.

    ஆப்பிள் விஷன் ப்ரோ பேஸ் மாடல் 256 ஜி.பி. மெமரி விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2.9 லட்சம் என துவங்குகிறது. இதன் 512 ஜி.பி. மற்றும் 1 டி.பி. மெமரி மாடல்களின் விலை முறையே 3 ஆயிரத்து 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3.07 லட்சம் மற்றும் 3 ஆயிரத்து 899 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 24 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார்.
    • சாட் மற்றும் க்ரூப்களில் இதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் உள்ள பிராட்காஸ்டிங் அம்சம் சேனல்ஸ்-இல் புதிய வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் அதன் ஃபாளோயர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்யும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள அம்சம் தான் வாட்ஸ்அப் சேனல். இதில் தற்போது கூடுதலாக புதிய வசதிகள் வழங்குவதை மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார்.

    அதன்படி வாட்ஸ்அப் சேனலலில் வாக்களிக்கும் வசதி வழங்கப்படுகிறது. அதன்படி வாட்ஸ்அப் சேனல் வைத்திருப்பவர்கள் தங்களின் உறுப்பினர்கள் இடையே கருத்து கேட்க வாக்கெடுப்பு நடத்த முடியும். ஏற்கனவே வாட்ஸ்அப் சாட் மற்றும் க்ரூப்களில் இதற்கான வசதி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

     


    இத்துடன் வாட்ஸ்அப் சேனல் அப்டேட்களை ஸ்டேட்டஸ் ஆக வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. ஒரே சேனலில் பலரை அட்மின்களாக வைத்துக் கொள்ளும் வசதியும் புதிய அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் சேனல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே, அதில் பல்வேறு புதிய வசதிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • டி.வி. வாங்கும் போது ஸ்மார்ட்போன் உள்ளிட்டவைகளை பரிசுகளாக பெற முடியும்.
    • பெரிய திரை கொண்ட டி.வி. மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள்.

    சாம்சங் நிறுவனம் தனது டாப் என்ட் டி.வி. மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன் படி சாம்சங் நியோ QLED, OLED, QLED மற்றும் 4K UHD டி.வி. மாடல்களை வாாங்குவோருக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவற்றின் கீழ் பயனர்கள் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் உள்ளிட்டவைகளை பரிசுகளாக பெற முடியும்.

    "தி ஃபியூச்சர் ஃபெஸ்ட்" என்ற பெயரில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு விற்பனையில் சாம்சங் டி.வி. மற்றும் சவுன்ட்பார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த சலுகைகள் ஜனவரி 31-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. இதில் சாம்சங்கின் பிரீமியம், 50 இன்ச் மற்றும் அதைவிட பெரிய திரை கொண்ட டி.வி. மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    இந்த டி.வி. மாடல்கள் சினிமேடிக் ஆடியோ விஷூவல் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டுள்ளன. இவற்றில் டால்பி அட்மோஸ், நியூரல் ஏ.ஐ. குவாண்டம் பிராசஸர் மற்றும் ஏ.ஐ. அப்ஸ்கேலிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    சலுகை விவரங்கள்:

    பெரிய திரை டி.வி. வாங்கும் போது ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 999 மதிப்புள்ள கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன், ரூ. 69 ஆயிரத்து 990 மதிப்புள்ள சாம்சங் 50 இன்ச் QLED 4K தி செரிஃப் டிவி, ரூ. 37 ஆயிரத்து 990 மதிப்புள்ள வயர்லெஸ் சவுன்ட் பார் உள்ளிட்ட நிச்சய பரிசுகள்.

    சாம்சங் 98 இன்ச் நியோ QLED 4K, QLED 4K டி.வி. வாங்கும் போது கேலக்ஸி S23 அல்ட்ரா இலவச பரிசாக வழங்கப்படுகிறது.

    தேர்வு செய்யப்பட்ட 50 இன்ச் மற்றும் அதற்கும் பெரிய திரை கொண்ட நியோ QLED, OLED, QLED மற்றும் க்ரிஸ்டல் 4K UHD டி.வி. வாங்கும் போது சாம்சங் Q சீரிஸ் சவுன்ட்பார் வழங்கப்படுகிறது.

    சாம்சங் 85 இன்ச் மற்றும் 75 இன்ச் நியோ QLED டி.வி. வாங்கும் போது ரூ. 69 ஆயிரத்து 990 மதிப்புள்ள சாம்சங் 50 இன்ச் QLED 4K தி செரிஃப் டி.வி. வழங்கப்படுகிறது.

    சாம்சங் 65 இன்ச் மற்றும் 55 இன்ச் OLED மற்றும் QLED 4K டி.வி.-க்களை வாங்கும் போது ரூ. 15 ஆயிரத்து 990 மதிப்புள்ள சாம்சங் சவுன்ட்பார் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 20 சதவீதம் வரை கேஷ்பேக், சாம்சங் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10 சதவீதம் வரை கூடுதல் கேஷ்பேக் பெற முடியும். இந்த சலுகைகள் ஜனவரி 31-ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை முன்னணி விற்பனை மையங்கள் மற்றும் சாம்சங் இ ஸ்டோரில் வழங்கப்படுகிறது.

    • சலுகைகளுடன் டேட்டா பலன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.
    • மற்ற வட்டாரங்களில் வழங்கப்படுவது சந்தேகத்திற்குரிய விஷயம்.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்திய பயனர்களுக்கு இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 91 மற்றும் ரூ. 288 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு சலுகைகளுடன் டேட்டா பலன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இவற்றில் வேலிடிட்டி எதுவும் வழங்கப்படவில்லை.

    இரண்டு சலுகைகளும் நாடு முழுக்க வழங்கப்படுகிறது. எனினும், இவை சென்னை வட்டாரத்திற்குள் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே காண்பிக்கிறது. அந்த வகையில், இந்த சலுகைகள் மற்ற வட்டாரங்களில் வழங்கப்படுவது சந்தேகத்திற்குரிய விஷயம் தான்.

    பி.எஸ்.என்.எல். ரூ. 91 சலுகையில் 600 எம்.பி. டேட்டா, 700 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இவைதவிர இந்த சலுகையில் வேறு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. அந்த வகையில், பயனர்கள் ஏற்கனவே ரிசார்ஜ் செய்த சலுகையை கொண்டு இந்த சலுகையை ரிசார்ஜ் செய்ய வேண்டும்.

    பி.எஸ்.என்.எல். ரூ. 288 சலுகையில் 60 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதன்பிறகு டேட்டா வேகம் நொடிக்கு 40 கே.பி. என்ற அளவுக்கு குறைக்கப்பட்டு விடும். இந்த சலுகை தினமும் அதிகளவு டேட்டா எதிர்பார்க்கும் பயனர்களுக்கு ஏற்ற ஒன்று ஆகும்.

    • அதிக மதிப்பு மிக்க நிறுவனம் என்ற அந்தஸ்த்தை எட்டியது.
    • அஸ்யூர் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததும் காரணம் என தகவல்.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. சத்ய நாதெல்லா தலைமை வகிக்கும் நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி சந்தையில் அதிக மதிப்பு மிக்க நிறுவனம் என்ற அந்தஸ்த்தை எட்டியுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி மைக்ரோசாப்ட் சந்தை மதிப்பு 2.87 டிரில்லியன் டாலர்கள் ஆகும். முன்னதாக 2018 மற்றும் 2021 ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதே போன்று உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற நிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் இந்த அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது.

     


    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூடிங் பிரிவான அஸ்யூர் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததே அந்தஸ்த்து அதிகரிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அமேசான் வெப் சேவைகளுக்கு கடும் போட்டியாளரான அஸ்யூர் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 40 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது.

    கிளவுட் கம்ப்யூடிங் பிரிவில் மைக்ரோசாப்ட் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும், இதன் சந்தை மதிப்பு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது. இதேபோன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்தும் போது மைக்ரோசாப்ட்-இன் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    • ஏராளமான பிரத்யேக சலுகைகள் வழங்கப்படுகிறது.
    • ப்ளிப்கார்ட் ரிபப்ளிக் டே சேல் ஜனவரி 14-ம் தேதி துவங்குகிறது.

    அமேசான் வலைதளத்தில் கிரேட் ரிபப்ளிக் டே சேல் (Great Republic Day Sale) சிறப்பு விற்பனை ஜனவரி 13-ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. குடியரசு தினத்திற்கு முன்பு துவங்கும் சிறப்பு விற்பனை பிரைம் சந்தா வைத்திருப்போருக்கு மட்டும் முன்கூட்டியே துவங்கிவிடும். இத்துடன் ஏராளமான பிரத்யேக சலுகைகள் வழங்கப்படுகிறது.

    கிரேட் ரிபப்ளிக் டே சேலில் பயனர்கள் அனைத்து விதமான பொருட்களுக்கும் சிறப்பு சலுகைகள், தள்ளுபடி மற்றும் வங்கி சார்ந்த பலன்களை பெற முடியும். அமேசானுக்கு கடும் போட்டியாளராக பார்க்கப்படும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ரிபப்ளிக் டே சேல் ஜனவரி 14-ம் தேதி துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

     


    சிறப்பு விற்பனை குறித்து அமேசான் வெளியிட்டுள்ள தகவல்களில், அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் ஜனவரி 13-ம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அமேசான் பிரைம் சந்தா வைத்திருப்போருக்கு இந்த விற்பனை 12 மணி நேரம் முன்னதாகவே துவங்கிவிடும். இத்துடன் ஏராளமான பொருட்களை ஒன்று அல்லது இரண்டே நாட்களில் டெலிவரி பெறும் வசதியும் வழங்கப்படுகிறது.

    எந்தெந்த பொருட்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படும் என்பது குறித்து அமேசான் இதுவரை முழு தகவல்களை வழங்கவில்லை. வரும் நாட்களில் இது தொடர்பான தகவல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். பொருட்கள் மட்டுமின்றி அமேசான் மியூசிக் மற்றும் வீடியோ ஸ்டிரீமிங் சேவைகளுக்கான சந்தாவும் வழங்கப்படலாம்.

    தற்போதைய தகவல்களின் படி அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேலில் ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களுக்கு 40 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இதர அக்சஸரீக்களை வாங்கும் போது அதிகபட்சம் 75 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. 

    • விஷன் ப்ரோ விற்பனை குறித்து ஆப்பிள் அப்டேட் கொடுத்தது.
    • ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்ய முடியும்.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முதல் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்- ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. எனினும், இதன் விற்பனை துவங்காமல் இருந்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் விஷன் ப்ரோ ஹெட்செட் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்து இருந்த நிலையில், இது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி ஆப்பிள் நிறுவனம் விஷன் ப்ரோ ஹெட்செட் விற்பனை பிப்ரவரி 2-ம் தேதி அமெரிக்காவில் துவங்கும் என்று அறிவித்து இருக்கிறது. பயனர்கள் இந்த ஹெட்செட்-ஐ ஜனவரி 19-ம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும். அமெரிக்க பயனர்கள் விஷன் ப்ரோ ஹெட்செட்-ஐ ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்ய முடியும். இதன் விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள் ஆகும்.

     


    விஷன் ப்ரோ ஹெட்செட் உடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரு ஹெட்பேன்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் மினிமலிஸ்ட் சோலோ நிட் பேன்ட், ஸ்டேபிலிட்டி கொண்ட டூயல் லூப் பேன்ட் வழங்கப்படுகிறது. இந்த ஹெட்செட்-இன் பெட்டி வெளிச்சம் புகாத வகையிலும், மென்மையான குஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அம்சங்களை பொருத்தவரை விஷன் ப்ரோ மாடலில் 23 மில்லியன் பிக்சல்கள் அடங்கிய, அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே சிஸ்டம் இரு டிஸ்ப்ளேக்களிடையே வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் பிரத்யேக டூயல் சிப் டிசைன் மற்றும் ஆப்பிள் சிலிகான் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த தொழில்நுட்பம் அசாத்திய டிஸ்ப்ளே அனுபவத்தை பயனர்களுக்கு கடத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் கொண்டு பயனர்கள் தங்களின் நினைவுகளை திரும்பி பார்க்க முடியும். இதன் இந்திய விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. 

    • சாம்சங் தனது கேலக்ஸி S24 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • கேலக்ஸி S24 சீரிஸ் இந்திய விற்பனை விவரங்கள் லீக் ஆகியுள்ளன.

    சாம்சங் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அடுத்த வாரம் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஜனவரி 17-ம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் தனது கேலக்ஸி S24 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    கேலக்ஸி S24 சீரிசில் - கேலக்ஸி S24, கேலக்ஸி S24 பிளஸ் மற்றும் கேலக்ஸி S24 அல்ட்ரா என மூன்று மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், இவை பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக லீக் ஆகி வருகின்றன. அதன்படி கேலக்ஸி S24 சீரிஸ் இந்திய விற்பனை விவரங்கள் வெளியாகியுள்ளன.

    இது குறித்து டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள தகவல்களில், இந்தியாவில் கேலக்ஸி S24 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவை சாம்சங் நிறுவனம் ஜனவரி 18 அல்லது 19-ம் தேதி துவங்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு ஸ்மார்ட்போனின் வினியோகம் ஜனவரி 24-ம் தேதியே துவங்கும் என கூறப்படுகிறது.

    விலையை பொருத்தவரை புதிய கேலக்ஸி S24 பிளஸ் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 04 ஆயிரத்து 999 அல்லது ரூ. 1 லட்சத்து 05 ஆயிரத்து 999 என்றும் கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 999 அல்லது ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 999 என துவங்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    • ஆப்பிள் ஐபோனுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • ஐபோன் மாடலுக்கான சிறப்பு சலுகைகள் குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு விஜய் சேல்ஸ்-இல் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறப்பு சலுகை விற்பனை 130 விஜய் சேல்ஸ் ஸ்டோர், ஆன்லைன் வலைதளத்தில் நடைபெறுகிறது.

    சிறப்பு விற்பனை காரணமாக 128 ஜி.பி. மெமரி கொண்ட ஐபோன் 13 விலை ரூ. 51 ஆயிரத்து 820 என மாறியுள்ளது. இதன் உண்மை விலை ரூ. 59 ஆயிரத்து 900 ஆகும். ஐபோன் 14 மாடலின் 128 ஜி.பி. விலை ரூ. 69 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 61 ஆயிரத்து 160 ஆக மாறி இருக்கிறது. ஐபோன் 14 பிளஸ் மாடலின் விலை ரூ. 70 ஆயிரத்து 490 என துவங்குகிறது.

     


    ஐபோன் 15 சீரிஸ் சலுகை விவரங்கள்:

    ஐபோன் 15 பேஸ் மாடல் விலை ரூ. 70 ஆயிரத்து 990

    ஐபோன் 15 பிளஸ் பேஸ் மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 820


    ஐபோன் 15 ப்ரோ 128 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 900 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ 512 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 48 ஆயிரத்து 900 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ 256 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 32 ஆயிரத்து 240 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ 1 டி.பி. ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 990 (வங்கி சலுகைகள் சேர்த்து)


    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 256 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 46 ஆயிரத்து 240 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 512 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 61 ஆயிரத்து 900 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 1 டி.பி. ரூ. 1 லட்சத்து 69 ஆயிரத்து 990 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    • மென்பொருள் பற்றிய தகவலை அந்நிறுவனம் டீசராக வெளியிட்டு உள்ளது.
    • சியோமியின் ஹைப்பர்-ஒ.எஸ். வழங்கப்படுகிறது.

    போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது X6 சீரிஸ் மற்றும் M6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை ஜனவரி 11-ம் தேதி அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதையொட்டி புதிய ஸ்மார்ட்போன்களின் அம்சங்களை அந்நிறுவனம் ஒவ்வொன்றாக டீசர் வடிவில் அறிவித்து வருகிறது.

    இந்த நிலையில், போக்கோ X6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மென்பொருள் பற்றிய தகவலை அந்நிறுவனம் டீசராக வெளியிட்டு உள்ளது. அதன்படி போக்கோ X6 ப்ரோ 5ஜி மாடலில் சியோமியின் ஹைப்பர்-ஒ.எஸ். வழங்கப்படுகிறது. சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஒ.எஸ். கொண்டு இந்தியாவில் அறிமுகமாகும் முதல் சாதனமாக இது இருக்கும்.



    இது தொடர்பான அறிவிப்பை போக்கோ இந்தியா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுன்டில் தெரிவித்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து போக்கோ F5 மாடலுக்கும் ஹைப்பர்-ஒ.எஸ். அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இதே போன்று சியோமி மற்றும் ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கும் புதிய ஒ.எஸ். அப்டேட் வழங்கப்பட உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை போக்க X6 ப்ரோ 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 8300 அல்ட்ரா பிராஸர் வழங்கப்படுகிறது. இதன் பேக் பேனலில் செவ்வக வடிவம் கொண்ட கேமரா மாட்யுல் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 mm2 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் சேம்பர் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. 

    • இந்திய முன்பதிவு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படும்.

    சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கேலக்ஸி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை ஜனவரி 17-ம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிகழ்வு சான் ஜோஸ் நகரில் நடைபெற உள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டதும், அதன் இந்திய முன்பதிவு பற்றிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

    அந்த வகையில், இந்திய பயனர்கள் புதிய கேலக்ஸி S24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்ய முடியும். புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு சாம்சங் இந்தியா ஸ்டோரில் மேற்கொள்ளலாம். முன்பதிவு கட்டணம் ரூ. 1999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்வோருக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     


    சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் விலை குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஜனவரி 17-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பயனர்கள் தற்போது செலுத்தும் முன்பதிவு கட்டணம் ரூ. 1999, ஸ்மார்ட்போன் வாங்கும் போது அதன் விலையில் இருந்து தானாக குறைக்கப்பட்டு விடும். ஒருவேளை புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் முடிவை மாற்றிக் கொள்பவர்கள், தாங்கள் செலுத்திய முன்பதிவு கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற முடியும்.

    • இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • விலை குறைப்பு தவிர வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. மிட் ரேன்ஜ் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் கேலக்ஸி A54 5ஜி மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. விலை குறைப்பு இரண்டு வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

    இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A54 5ஜி மாடலின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ. 38 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 40 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.

     

    தற்போதைய விலை குறைப்பின் படி கேலக்ஸி A54 ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 36 ஆயிரத்து 999-க்கும் 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 38 ஆயிரத்து 999-க்கும் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் ஆசம் வைட், ஆசம் லைம், ஆசம் வைலட் மற்றும் ஆசம் கிராஃபைட் நிறங்களில் கிடைக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

     


    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி A54 5ஜி மாடலில் 6.4 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், சாம்சங் எக்சைனோஸ் 1380 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ. 5.1, டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

    இத்துடன் வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5MP டெப்த் சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    ×