search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    • நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் 200-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன.

    நாய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ மாடலில் 2 இன்ச் கர்வ்டு டிஸ்ப்ளே, நூற்றுக்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், உடல்நல அம்சங்கள், ப்ளூடூத் காலிங் என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    இத்துடன் 200-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள், நாய்ஸ் ட்ரூ சின்க் டெக் மூலம் டயல் பேட் மற்றும் ரீசென்ட் கால் ஹிஸ்ட்ரியை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் இன்-பில்ட் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வசதி உள்ளது. இதில் வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

     


    நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ அம்சங்கள்:

    2.0 இன்ச் HD TFT LCD ஸ்கிரீன், 2.5D கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே

    200-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்

    ப்ளூடூத் காலிங் வசதி

    பில்ட்-இன் மைக்ரோபோன்

    வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி

    ஹார்ட் ரேட், SpO2, ஸ்டிரெஸ் மானிடரிங்

    115-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    ஏழு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் பேட்டரி

    நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே

    வானிலை அப்டேட்கள்

    கேமரா மற்றும் மியூசிக் கன்ட்ரோல்

    ரிமைன்டர், அலாரம், கால்குலேட்டர்

    புதிய நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ ஸ்மார்ட்வாட்ச் சிலிகான் ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது மிஸ்ட் கிரே, ஸ்பேஸ் புளூ மற்றும் ஜெட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் லெதர் ஸ்டிராப் வேரியன்ட்கள் கிளாசிக் பிளாக், கிளாசிக் பிரவுன் நிறங்களிலும், மெட்டாலிக் ஸ்டிராப் வேரியன்ட் பிளாக் லின்க் மற்றும் சில்வர் லின்க் நிறங்களிலும் கிடைக்கிறது.

    நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 1499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை பிப்ரவரி 19-ம் தேதி துவங்க இருக்கிறது. அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மிஸ்ட் கிரே, ஸ்பேஸ் புளூ மற்றும் ஜெட் பிளாக் நிற ஆப்ஷன்களின் விலை ரூ. 1399 என்றும் கிளாசிக் புளூ, கிளாசிக் பிரவுன் நிற ஆப்ஷன்களின் விலை ரூ. 1499 என்றும் பிளாக் லின்க் மற்றும் சில்வர் லின்க் விலை ரூ. 1599 என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    • ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் ஆடம்பரமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன.
    • அதிக விலை கொண்ட வெர்ஷனாக இருக்கிறது.

    ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவன சாதனங்களை ஆடம்பரமாக கஸ்டமைசேஷன் செய்வதில் புகழ் பெற்ற நிறுவனம் கேவியர். காதலர் தினத்தை ஒட்டி கேவியர் நிறுவனம் ஐபோன் 15 வேலன்டைன்ஸ் டே எடிஷன் மற்றும் இதய வடிவம் கொண்ட ஏர்டேக் என விசேஷமான சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன்களை அந்நிறுவனம் "கார்டன் ஆஃப் ஈடன்" என அழைக்கிறது. இதில் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் ஆடம்பரமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன. இதில் பேந்தர் கோல்டு 18K மாடலின் (ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்) விலை 60 ஆயிரத்து 350 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 50 லட்சத்து 11 ஆயிரத்து 273 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     


    அந்த வகையில், இது தற்போது கிடைப்பதிலேயே அதிக விலை கொண்ட வெர்ஷனாக இருக்கிறது. இந்த எடிஷனில் ஐபோன் முழுக்க 18K தங்கத்தால் ஆன பாடி மற்றும் 159 கருப்பு வைர கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. புதிய கார்டன் ஆஃப் ஈடன் சீரிசில் மொத்தம் ஐந்து விதமான ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    இவை ஒவ்வொன்றிலும் ஆடம்பர பொருட்களான வைரங்கள், ரத்தின கற்கள் மற்றும் படிகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பிளாக்ஷிப் பேந்தர் கோல்டு 18K மட்டுமின்றி வொன்டர்ஃபுல் ஆர்சிட் ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் விலை 9 ஆயிரத்து 630 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சத்து 99 ஆயிரத்து 577 என துவங்குகிறது.

    கார்டன் ஆஃப் ஈடன் கலெக்ஷன் வாங்கும் போது இதய வடிவம் கொண்ட ஏர்டேக் வழங்கப்படுகிறது. இதனை தனியாகவும் வாங்கிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த மாடல்கள் அனைத்தும் லிமிடெட் எடிஷன் என்பதால் மொத்தத்தில் 14 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. மற்ற மாடல்கள் அனைத்தும் 99 யூனிட்கள் உள்ளன.

    • ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • ஐபோன் 16-ஐ சார்ந்து வடிவமைக்கப்பட்டு இருக்கலாம்.

    ஆப்பிள் நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஐபோன் SE மாடல் தொடர்பான தகவல்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில், புதிய ஐபோன் SE 4 மாடல் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    முந்தைய தகவல்களின் படி ஐபோன் SE 4 மாடலின் டிசைன் ஐபோன் 14-ஐ தழுவி உருவாக்கப்படலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் SE 4 மாடலில் நாட்ச் நீக்கப்பட்டு டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. டைனமிக் ஐலேண்ட் அம்சத்தினை ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் அறிமுகப்படுத்தியது.

     


    பிறகு, கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 சீரிசின் அனைத்து மாடல்களிலும் டைனமிக் ஐலேண்ட் அம்சம் வழங்கப்பட்டது. புதிய ஐபோன் SE 4 குறித்து டிப்ஸ்டர் மஜின் பு வெளியிட்டுள்ள தகவல்களில், "புதிய ஐபோன் SE 4 மாடலின் டிசைன் தற்போது உருவாக்கப்படும் ஐபோன் 16-ஐ சார்ந்து வடிவமைக்கப்பட்டு இருக்கலாம்," என தெரிவித்தார்.

    இத்துடன் ஐபோன் SE நான்காம் தலைமுறை மாடலில் டைனமிக் ஐலேண்ட் அம்சம் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அளவீடுகளை பொருத்தவரை ஐபோன் SE 4 ஆப்பிள் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய ஐபோன் XR போன்றே இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் SE 4 மாடலில் 6.1 இன்ச் OLED பேனல், ஆப்பிளின் 5ஜி சிப்செட், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படலாம். முன்னதாக ஆப்பிள் நிறுவனம் 2022-ம் ஆண்டு ஐபோன் SE மாடலை அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில், இதன் விலை ரூ. 43 ஆயிரத்து 900 என துவங்கியது.

    • புதிய சியோமி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • சியோமி 14 சீரிஸ் மாடல்கள் தலைசிறந்த கேமரா சிஸ்டம் கொண்டிருக்கும்.

    சியோமி நிறுவனம் தனது சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. வரும் பிப்ரவரி 25-ம் தேதி பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் முற்றிலும் புதிய சியோமி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போனிற்காக சியோமி நிறுவனம் லெய்காவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இதன் மூலம் சியோமி 14 சீரிஸ் மாடல்கள் தலைசிறந்த கேமரா சிஸ்டம் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    "இந்த போன் மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையை மிஞ்சும் அளவுக்கு புகைப்படங்களை வெளிப்படுத்துகிறது. லெய்காவுடன் இணைந்து மொபைல் புகைப்பட கலையில் முற்றிலும் புதிய அத்தியாயத்தை துவங்குகிறோம்," என சியோமி தெரிவித்துள்ளது.

     


    சியோமி 14 மற்றும் சியோமி 14 ப்ரோ மாடல்கள் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் சியோமி 14 அல்ட்ரா மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபற்றிய அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

    சர்வதேச வெளியீட்டுடன் சியோமி நிறுவனம் புதிய சியோமி 14 சீரிஸ் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர்களையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சியோமி 14 சீரிஸ் மாடல்கள் அதன் சர்வதேச வெளியீட்டின் போதே இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் சியோமி நிறுவனம் தனது சியோமி 14 சீரிஸ் மாடல்களை பிப்ரவரி 25-ம் தேதி (இந்திய நேரப்படி இரவு 7.30 மணி) அறிமுகம் செய்ய இருக்கிறது.

    • வெளிப்புற சத்தத்தை தடுத்து, சிறப்பான தகவல் பரிமாற்றத்திற்கு வழி செய்கிறது.
    • பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கு பிளேடைம் கிடைக்கும்.

    ஐடெல் நிறுவனம் தனது முற்றிலும் புதிய குறைந்த விலை இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஐடெல் S9 ப்ரோ என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் அந்நிறுவனத்தின் ரோர் 75 ஓபன் இயர்பட்ஸ் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐடெல் S9 ப்ரோ மாடலில் இன்-இயர் டிசைன் உள்ளது. இதில் 10mm பாஸ் பூஸ்ட் டிரைவர்கள், என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் அழைப்புகளின் போது வெளிப்புற சத்தத்தை தடுத்து, சிறப்பான தகவல் பரிமாற்றத்திற்கு வழி செய்கிறது.

    இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கு பிளேடைம் கிடைக்கும். இத்துடன் ப்ளூடூத் 5.3, 45ms அல்ட்ரா லோ லேடன்சி மோட், டச் கண்ட்ரோல்கள், டைப் சி போர்ட் போன்ற வசதிகள் உள்ளன.

     


    ஐடெல் S9 ப்ரோ அம்சங்கள்:

    10mm பாஸ் பூஸ்ட் டிரைவர்கள்

    டூயல் மைக் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன்

    45ms லோ லேடன்சி கேமிங் மோட்

    ப்ளூடூத் 5.3

    இயர்பட் (40 எம்.ஏ.ஹெச். பேட்டரி)

    கேஸ் (400 எம்.ஏ.ஹெச். பேட்டரி)

    40 மணி நேர பிளேடைம்

    ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி 10 நிமிட சார்ஜில் 100 நிமிடங்கள் பிளேபேக்

    டைப் சி சார்ஜிங்

    IOX5 ஸ்பிலாஷ் ப்ரூஃப் வசதி

    இன்-இயர் டிடெக்ஷன்

    இந்திய சந்தையில் புதிய ஐடெல் S9 ப்ரோ இயர்பட்ஸ் டார்க் புளூ மற்றும் நெபுளா பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 799 ஆகும். விற்பனை நாடு முழுக்க சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

    • ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். கொண்டிருக்கும் என தகவல்.
    • விர்ச்சுவல் ரேம் வசதி வழங்கப்படலாம்.

    ரெட்மி A2 வரிசையில் சியோமி நிறுவனம் தனது அடுத்த பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரெட்மி A3 பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 13MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

    புதிய ரெட்மி A3 ஸ்மார்ட்போன் பல்வேறு ஆப்பிரிக்கா வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்களில் இந்த ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இத்துடன் வாட்டர் டிராப் ஸ்டைல் கொன்ட நாட்ச் வழங்கப்படுகிறது.

    இது தொடர்பான வலைதள விவரங்களில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். கொண்டிருக்கும் என்றும் இதில் 6.71 இன்ச் HD+ 1600x720 பிக்சல் எல்.சி.டி. ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மீடியாடெக் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், விர்ச்சுவல் ரேம் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 4ஜி, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 3.5mm ஆடியோ ஜாக், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    • மற்றொரு மாடல் விவரங்களும் இடம்பெற்றுள்ளது.
    • கேலக்ஸி Z ஃபோல்டு 6 சீரிஸ்-உடன் அறிமுகம் செய்யப்படலாம்.

    சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், இந்த கேலக்ஸி Z ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனின் என்ட்ரி லெவல் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி Z ஃபோல்டு 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இதன் மூலம் சாம்சங் நிறுவனம் ஒரே ஆண்டில் இரண்டுக்கும் மேற்பட்ட கேலக்ஸி ஃபோல்டபில் சாதனத்தை அறிமுகம் செய்வது முதல் முறையாக இருக்கும். சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் இறக்குமதி / ஏற்றுமதி டேட்டாபேஸ்-இல் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் Z ப்ளிப் 6 மாடல்களுடன் மற்றொரு மாடல் விவரங்களும் இடம்பெற்றுள்ளது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    அதன்படி இரு மாடல்களின் குறியீட்டு பெயர் Q6 மற்றும் B6 என சூட்டப்பட்டுள்ளன. இவற்றுடன் Q6A என்ற குறியீட்டு பெயர் கொண்ட சாதனமும் இடம்பெற்று இருக்கிறது. இது சாம்சங்-இன் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கப்பட்டு வரலாம் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.

    மேலும் இது சாம்சங்கின் முதல் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என கூறப்படுகிறது. உண்மையில் இத்தகைய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இது பற்றிய தகவல்கள் மட்டும் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    • போட் ஏர்டோப்ஸ் 91 மாடலில் ENX தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • போட் ஏர்டோப்ஸ் 91 மாடல் அதிவேக சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    போட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஏர்டோப்ஸ் 91 இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 45 மணி நேர பேட்டரி பேக்கப், குவிக் சார்ஜ் வசதி, 10mm டிரைவர், அதிகபட்சம் 50ms லோ லேடன்சி, ENX தொழில்நுட்பம் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய போட் ஏர்டோப்ஸ் 91 மாடல் ஆக்டிவ் பிளாக், மிஸ்ட் கிரே மற்றும் ஸ்டாரி புளூ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் மற்றும் போட் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.

     


    போட் ஏர்டோப்ஸ் 91 அம்சங்கள்:

    10mm ஆடியோ டிரைவர்கள்

    பீஸ்ட் மோட் மற்றும் லோ லேடன்சி வசதி

    டச் கண்ட்ரோல்

    டூயல் மைக் மற்றும் ENX தொழில்நுட்பம்

    ப்ளூடூத் 5.3

    அதிவேக கனெக்டிவிட்டிக்காக IWP (இன்ஸ்டா வேக் அன்ட் பேர்)

    வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி

    IPX4 ஸ்பிலாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட்

    அதிகபட்சம் 45 மணி நேர பிளேபேக்

    ASAP ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    யு.எஸ்.பி. டைப் சி கனெக்டர்

    10 நிமிட சார்ஜில் 120 நிமிட பிளேபேக் கிடைக்கும்

    • புதிய சாதனத்தின் காப்புரிமை விவரங்கள் சமீபத்தில் வெளியானது.
    • தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெற்று இருந்தது.

    சாம்சங் நிறுவனம் சதுரங்க வடிவம் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எக்ஸ்டென்ட் ஆகும் வசதி கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த சாதனத்தின் காப்புரிமை விவரங்கள் சமீபத்தில் வெளியானது.

    அதில் புதிய சாதனம் சதுரங்க வடிவம் கொண்டிருப்பதும், தானாக நீட்டித்துக் கொள்ளும் டிஸ்ப்ளே ஒன்றும் இடம்பெற்று இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த டிஸ்ப்ளே, சாதனத்தில் இருந்து நீளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக சாம்சங் நிறுவனம் இரண்டு தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெற்று இருந்தது.


     

    காப்புரிமைகளில் இரு தொழில்நுட்பங்களும்- ஃபிளெக்ஸ் மேஜிக் மற்றும் ஃபிளெக்ஸ் மேஜிக் பிக்சல் என்ற பெயர் கொண்டிருந்தன. இவை ஐரோப்பிய காப்புரிமை பதிவுக்கான தளம் மற்றும் ஐரோப்பிய யூனியன் காப்புரிமை அலுவலகத்தில் காப்புரிமை கோரி விண்ணப்பிக்கப்பட்டு இருந்தன. இந்த தொழில்நுட்பங்கள் "ஸ்மார்ட்போன்களுக்கான நீளும் ஸ்கிரீன்" என குறிப்பிடப்பட்டுள்ளன.

    அமெரிக்க காப்புரிமை வலைதளத்திலும் இதே போன்ற தொழில்நுட்பம் இடம்பெற்று இருக்கிறது. எனினும், இவற்றில் இத்தகைய தகவல் எதுவும் இடம்பெறவில்லை. காப்புரிமை தகவல்களின் படி புதிய டிஸ்ப்ளே பல்வித மூலைகளில் இருந்து நீட்டித்துக் கொள்ளும் திறன் கொண்டிருக்கிறது. காப்புரிமையில் சதுரங்க வடிவம் கொண்ட ஸ்மார்ட்போன் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை.

    எனினும், அதில் உள்ள தகவல்கள் இது அத்தகைய வடிவம் கொண்ட சாதனம் தான் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது. இதுதவிர இந்த தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் டி.வி., ஏ.ஆர். எனப்படும் செயற்கை நுண்ணறிவு சாதனங்கள், ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்டவைகளிலும் பயன்படுத்த முடியும் என தெரிகிறது. புதிய சாதனம் பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

    • புது அக்சஸரீக்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்படலாம்.
    • மினி எல்.இ.டி. ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என தகவல்.

    ஆப்பிள் நிறுவனம் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டிற்கு முன் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அந்நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் தெரிவித்து இருக்கிறார்.

    அந்த வகையில், மார்ச் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ, மேம்படுத்தப்பட்ட ஐபேட் ஏர், அளவில் பெரிய ஐபேட் ஏர் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார். இவற்றில் மேக்புக் ஏர் மாடல் 13 இன்ச் மற்றும் 15 இன்ச் டிஸ்ப்ளே ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் இவற்றில் M3 பிராசஸர்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

     


    புதிய ஐபேட் ப்ரோ மற்றும் மேக்புக் ஏர் மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. புதிய ஐபேட் ப்ரோ மாடல்களுடன் புது அக்சஸரீக்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐ.ஒ.எஸ். 17.4 வெர்ஷனின் முதல் பீட்டாவில் மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் உள்ளிட்டவை ஐபேட் ப்ரோவில் பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது. இத்துடன் ஃபேஸ் ஐ.டி. கேமராவும் வழங்கப்படுகிறது.

    2024 ஐபேட் மாடலில் புதிய OLED ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என்றும் இவற்றில் அதிக பிரகாசமான டிஸ்ப்ளே மற்றும் அதிக நேர பேட்டரி பேக்கப் வழங்கும் மினி எல்.இ.டி. ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    • ஹானர் மேஜிக் V2 தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இதில் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யு.ஐ. 6.1 ஒ.எஸ். உள்ளது.

    ஹானர் பிரான்டு ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ச்சியாக புது சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், ஐரோப்பாவில் ஹானர் மேஜிக் V2 மாடல் இணைந்துள்ளது.

    கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலான மேஜிக் V2 தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

     


    அம்சங்களை பொருத்தவரை ஹானர் மேஜிக் V2 மாடலில் 7.9 இன்ச் OLED, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட மெயின் டிஸ்ப்ளே, 5.45 இன்ச் OLED கவர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர், 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 50MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யு.ஐ. 6.1 ஒ.எஸ். கொண்டிருக்கிறது. இத்துடன் 4610 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஹானர் மேஜிக் V2 மாடல் பர்பில் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    ஐரோப்பிய சந்தையில் ஹானர் மேஜிக் V2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பர்பில் மற்றும் பிளாக் நிற வேரியன்ட்களின் விலை முறையே 1 ஆயிரத்து 699.99 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 585 மற்றும் 1 ஆயிரத்து 999 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 172 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • நத்திங் நிறுவனம் புதிய நெக்பேன்ட் இயர்போனை உருவாக்கி வருவதாக தகவல்.
    • இந்த மாடல் விவரங்கள் வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் TDRA வலைதளத்தில் நத்திங் (2a) ஸ்மார்ட்போன் விவரங்கள் சமீபத்தில் இடம்பெற்று இருந்தது. இதே வலைதளத்தில் தற்போது நத்திங் நெக்பேன்ட் ப்ரோ விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் இதே சாதனம் பற்றிய தகவல்கள் இந்தியாவின் BIS வலைதளத்திலும் இடம்பெற்றுள்ளது. நத்திங் நெக்பேன்ட் ப்ரோ மாடல் சி.எம்.எஃப். பிரான்டிங்கில் அறிமுகம் செய்யப்படும் என BIS வலைதளத்தில் தெரியவந்துள்ளது. அந்த வகையில், புதிய நெக்பேன்ட் இயர்போன் நத்திங் நிறுவத்தின் சி.எம்.எஃப். பிரான்டு அறிமுகப்படுத்தும் இரண்டாவது ஆடியோ சாதனமாக இருக்கும்.

    முன்னதாக சி.எம்.எஃப். பட்ஸ் ப்ரோ மாடல் ஏற்கனவே அறிமுகமாகி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நத்திங் நெக்பேன்ட் ப்ரோ மாடல் B164 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என TDRA வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், இது நத்திங் நிறுவனத்தின் ஆடியோ சாதனம் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய இயர்போன் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இந்த இயர்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    ×