search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலும் எங்களுக்கு பாதிப்பு இருக்காது: ஆரோன் பிஞ்ச்
    X

    மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலும் எங்களுக்கு பாதிப்பு இருக்காது: ஆரோன் பிஞ்ச்

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் எங்களுக்கு பாதிப்பு இருக்காது என்று ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இன்றுவரை 16 போட்டிகளில் நடைபெற்றுள்ளன. இதில் மூன்று போட்டிகளில் மழையால் கைவிடப்பட்டுள்ளது. நாளை பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டமும் மழையால் பாதிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.

    இந்நிலையில் மூன்று ஆட்டத்தில் இரண்டில் வெற்றி பெற்றுள்ள எங்களுக்கு, மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலும் அது எங்களை பாதிக்காது என்று ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘அடுத்த இரண்டு மூன்று நாட்களில் வானிலை (Weather) மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த வாரம் வானிலை சிறப்பாக மாறிவிடும். அதன்பின் நாடு முழுவதும் உலகக்கோப்பை தொடர் தங்கு தடையின்றி சிறப்பாக நடக்கும்.

    உலகக்கோப்பையின் தொடக்கத்தில் வெற்றி பெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்றிரண்டு போட்டிகள் கைவிடப்பட்டு டாப் 4-ல் இருந்து பின் தங்குவதை எந்த அணியும் விரும்பாது. பாகிஸ்தான் மிகவும் அபாயகரமான அணி. நாளைய போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலும் எங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது’’ என்றார்.
    Next Story
    ×